Aug 1, 2015

சமூக தீமையான மதுவை ஒழிப்போம்!

சமூக தீமையான மதுவை ஒழிப்பதற்காக தொடர்ந்து போராடி வந்த காந்தியவாதி சசி பெருமாள் இன்று (31-07-2015) மதியம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடையில் உள்ள மதுக்கடைக்கு எதிராக போராடியபோது உயிர் இழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. 

மது ஒழிப்பிற்கான போராட்டத்திலேயே உயிர் இழந்த போராளி சசி பெருமாளின் கனவான மது இல்லாத தமிழகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அழைப்பு விடுக்கிறது. பூரண மதுவிலக்கை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது.

மேலும் சசி பெருமாளின் மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்று உடனே மதுவிலக்கை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டு கொள்கிறது. காந்தியவாதி சசி பெருமாள் அவர்களின் மரணம் தமிழகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.  

No comments: