Jul 31, 2015

120 கோடி இந்திய மக்களின் ஆன்மா!

“மிஸைல் மேன்” என்று உலக மக்களால்  அழைக்கப்பட்ட டாக்டர்.அப்துல் கலாம் இந்தியாவின் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகவும், சிறந்த அறிவியல் மேதையாகவும் திகழ்ந்தார். எல்லாவற்றிர்கும் மேலாக அவர் ஒரு நல்ல தமிழராக ஐக்கிய நாடுகள் சபையிலேயே தமிழை ஒலிக்கச்செய்த மிகப்பெரும் புலமை பெற்றவராக இருந்தார்.
மாணவர்களை மிகவும் நேசித்த அவர் மாணவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் மரணமடைந்தார். ஒட்டுமொத்த இந்தியாவும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. 120 கோடி இந்திய மக்களின் சோகத்தில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் தங்களை இணைத்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: