Aug 15, 2011

ஓ இந்தியா! இந்திய நாடா ! ஹிந்துத்துவா நாடா !?

நெல்லை : நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இந்திய சுதந்திர தினமான இன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெறவிருந்த சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ள தமிழக காவல்துறைக்கு அவ்வியக்கத்தின் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை ப்ரஸ் க்ளப்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: வருகின்ற 65-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நெல்லையில் நடத்த திட்டமிட்டிருந்தது. சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூர்ந்திடவும், பெற்ற சுதந்திரத்தை பேணி பாதுகாத்திடவும் சுதந்திர அணிவகுப்பு மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களை பல ஆண்டுகளாக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகின்றது. ஆனால் இவ்வருடம் வேண்டுமென்றே காலதாமதம் செய்து, நீதிமன்றத்தை அணுகக்கூட வாய்ப்பு கொடுக்காமல் அனுமதி மறுத்துள்ளது காவல்துறை.

அனைத்து இயக்கங்கள் மற்றும் கட்சிகள் சுதந்திர தினத்தை பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக கொண்டாடி வருகின்றார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தை துவக்கி வைத்தும், தங்களின் சதவீதத்திற்கு அதிகமான அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றும் இந்திய சுதந்திர வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் முஸ்லிம்கள். ஆனால், இப்படி போராடி பெற்ற சுதந்திர இந்தியாவின் நிலையோ, ஊழல், மறைமுக காலனியாதிக்கத்திற்கு வித்திட்டுவரும் வெளியுறவுக்கொள்கை, அராஜக, ஜனநாயக விரோத அடாவடி அரசியல், சமநீதியின்மை போன்ற பல்வேறு தீமைகள் நாட்டில் புரையோடி சுதந்திரத்திற்காக பாடுபட்டு இரத்தம் சிந்திய நமது முன்னோர்களின் தியாகங்களை செல்லாகாசாக்கிவிட்டது. இத்தகைய போராடி பெற்ற சுதந்திரத்தை ஜனநாயகரீதியில் பாதுகாத்திடவும் மற்றும் நமது முன்னோர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவுமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை வருடாவருடம் நடத்திவருகின்றது. இப்படி சீரிய சிந்தனையோடு நடத்தப்பட்டு வரும் சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

மேலும் காவல்துறை சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி மறுப்பதற்கு கையாண்ட முறை கண்டனத்திற்குரியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் தொடர்ந்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து அனுமதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியபோதும் காவல்துறை திட்டமிட்டே இழுத்தடித்து அனுமதி மறுத்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு மதுரையில் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தபோது இது போன்று அனுமதி மறுக்கப்பட்டபோது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றமும் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கியது. அதேபோன்று இந்த முறையும், நீதிமன்றம் சென்றுவிடக் கூடாது என்கிற தீயநோக்கில் காவல்துறை செயல்பட்டுள்ளதுடன், கடந்த கால தீர்ப்புக்கு எதிராகவும் காவல்துறை செயல்பட்டுள்ளது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

காவல்துறையின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தையும், சிறுபான்மையினருக்கு எதிராக அவர்களின் உரிமையை மறுத்து செயல்பட்டுவருவதை குறித்தும் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். எங்களின் நோக்கம் சுதந்திர தினத்தை அமைதியான முறையில் சிறப்பான முறையில் கொண்டாடவேண்டும் என்பதுதான். ஆனால் அரசும் காவல்துறையும் சிறுபான்மையினர் மீது கொண்ட காழ்ப்புணர்வால் அவர்களை வன்முறையாளர்கள் என சித்தரிக்க முயற்சித்தும் சதி செய்தும் வருகின்றனர். அத்தகைய முயற்சி, சதிக்கு நாங்கள் ஒருபோதும் பலியாகமாட்டோம்.
கடந்த கால அரசு இதற்கு முந்தைய ஆண்டுகளில் முஸ்லிம்களின் இந்த சுதந்திர தின அணிவகுப்பு மைதானத்தில் நடத்த அனுமதித்தது. ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசோ சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகள் மீறப்படுவதை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.

சுதந்திர தினத்தன்று நாடே கோலாகலத்தில் மூழ்கியிருக்கும்போது அந்த சுதந்திரதினத்தை கொண்டாட கூட சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அனுமதியை மறுத்துள்ளது பெரும் அநீதியாகும். இது முஸ்லிம் சமூகத்தை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது கவலையில் ஆழ்த்தியுள்ளது. களக்காடு, ஏர்வாடி, கடையநல்லூர், மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மக்களில் காவல்படையை குவித்து ஊரைச் சுற்றி காவல் தடுப்புகளை ஏற்படுத்தி சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை பீதியடையச் செய்தும் நெல்லை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையின் துவேஷமான இந்த மனித உரிமை மீறலை பாப்புலர் ஃப்ரண்ட் கண்டிக்கின்றது.

அரசும் இதனை வேடிக்கை பார்ப்பது குடிமக்களின் சுதந்திரத்தையே கேள்விக் குறியாக்குகின்றது. காவல்துறை மற்றும் அரசின் இந்த உரிமை மீறலை கண்டிக்கும் வகையில் வருகின்ற 17.8.2011 அன்று மாநிலம் தழுவிய அளவில் தொடர் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை; அதை எவர் தடுத்தாலும் அனுமதிக்கமாட்டோம் என்ற செய்தியை நாங்கள் பதிவுச்செய்ய விரும்புகின்றோம். இச்சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில செயலாளர் ஃபைஸல் அஹ்மத், மாவட்ட தலைவர் அன்வர் முஹைதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

** நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் நடத்திய ஆர் எஸ் எஸ் போன்ற தீவீரவாத அமைப்புகளுக்கு எந்த தடையுமில்லை, சுதந்திர தினம் பார்பனர்களின் கையில் சிக்கி இருப்பதும், சிறுபான்மை மக்கள் அதை கொண்டாட கூட மறுக்கப்படுவதும் ஆகா இது போன்ற நிலைமை நீடிக்குமானால் இந்தியா ரஷ்யா போல் உடைவதில் எந்த தவறுமில்லை., சிந்திக்கட்டும் அரசும் அரசு அதிகாரிகளும் **

6 comments:

வாஞ்ஜுர் said...

சற்று பொறுமையுடன் காணொளியை செவியுற்று அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.

CLICK >>> பகுதி 1. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா?. VIDEO 1&2 of 14. <<< .


CLICK >>> பகுதி 2 . தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா? அனைவரையும் கவரும்.. VIDEO 3 & 4 of 14. <<<<

.

Anonymous said...

சொம்பை தூக்கிக்கொண்டு அலையும் Robin ராபினுக்கு

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.(பைபிள் புதிய ஏற்பாடு மத்தேயு 5 : 39)

** ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? **

ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? **

இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா?

என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது.

** புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல்

"இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்..

இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.

** ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்..

சொம்பை தூக்கிக்கொண்டு அலையும்
Robin,

இத்தள‌த்தில் உம‌க்கு நிறைய‌ படிப்பிணை இருக்கிற‌து.

சொடுக்கி ப‌டிப்பீர் / click to read....>

**கண்ணில் கட்டிலடங்கா கருணையுடன் பால் வடியும் முகமாக ஊடகங்களிலும் சித்திரங்களிலும் சிலைக‌ளிலும் காட்சி த‌ரும் க‌ர்த்தரின் சொற்க‌ளான‌, கிறிஸ்துவத்தின் அடிப்படையான‌ பைபிள் என்ன‌ கூறுகிறது. ப‌டியுங்க‌ள்.** <...


.....

Robin said...

//சொம்பை தூக்கிக்கொண்டு அலையும் Robin ராபினுக்கு //

அனாமதேயமாக நாத்திகவேடம் போட்டுக்கொண்டு திரியும் இஸ்லாமியருக்கு,

இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு சோம்பு தூக்கும் உம்மை போன்றவர்களுக்கு மற்றவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்ல எந்த அருகதையுமில்லை.

அநாம‌தேய‌ நைட்டிங்கேல் said...

ராபின்

அநாமதேயனாக தந்தையாக மகனாக ஆவியாக ஆரியனாக துலுக்கனாக நாத்திகனாக ஆத்திகனாக கிறுத்துவனாக பகுத்தறிவாளனாக பார்ப்பணனாக‌ யாரயிருந்தால் என்ன?

தளத்துக்கு சென்று ப‌டிக்க‌வும்

பைபிளில் உள்ளவை.
பெரும்பான்மையான அப்பாவி கிறிஸ்துவ‌ர்களே அறியாத அப்பட்டமான உண்மைக‌ள்......


.

ராபின்

வாஞ்ஜூர் அளித்திருக்கும் சுட்டிக‌ளும் பிர‌மாத‌ம். பிர‌மாத‌ம்.

ராபின் கேட்டு தெளிவாகி தெளிவடைய செய்யும் விடியொக்க‌ள்

வாஞ்ஜூர் அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றி ப‌ல்லாயிர‌ம்.

அநாம‌தேய‌ நைட்டிங்கேல்


.

Anonymous said...

india hindu naadakave irunthirukkalaam. theeviravaatha islam alikka pattirukkum.

Anonymous said...

ராஜபக்சேவை நோக்கும் அத விதத்தில்தான் மோடியான கேடியையும் பார்க்கவேண்டும். ஆனால் ஏனோ
அது இங்கே நடப்பதில்லை. இந்தியாவில் நடக்கும் இதே பேரினவாதம்தான் இலங்கையிலும் நடக்கிறது.
அங்கும் ஆட்சி செய்பவன் பேரினப் பேய். இங்கும் குஜராத்தில் ஆட்சி செய்பவன் பேரினப் பேய்.

ஏன் அறிவும், மனசாட்சியும் ஒருங்கே அமைந்த எம் தமிழ் மக்கள் ஒரு சார்பு பார்வை உடையோராய்
மாறினர்.
- PATTIKKAATTAAN