Jun 14, 2011

சாமியார் நித்யானந்தாவின் எலும்பை முறித்த குதிரை!!

JUNE 15, சாமியார் நித்யானந்தா குதிரை சவாரி செய்யும் போது, குதிரை மிரண்டு அவரை கீழே தள்ளியது.

இதனால் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, பெங்களூரு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.  பிடதி நித்யானந்தா தியான பீட ஆசிரமத்தில் இன்று குதிரை சவாரி செய்தார் செக்ஸ் சாமியார் நித்தி என்ற நித்யானந்தா அப்போது அவர் சாவாரி செய்த குதிரை மிரண்டதில் அவர் கீழே விழுந்தார்.

இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்ப்பட்டது, இதனால் காலை 11 மணிக்கு, பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இங்குள்ள வி.ஐ.பி.,க்கள் அறையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிந்திக்கவும்: இந்த போலி செக்ஸ் சாமியார் போடும் ஆட்டத்தை பொறுக்காத வாயில்லா ஜீவன் இவரை கீழே தள்ளியது. மக்களால் செய்ய முடியாததை, சட்டத்தால் செய்ய முடியாததை குதிரை செய்திருக்கு,  இந்த குதிரைக்கு ஒரு ஓ போடுவோம்.

தனிநபர் விசயத்தில் நாம் தலையிட விரும்பவில்லை அதே நேரம் பெண்களை தவறான முறையில் பயன்படுத்தும் இது போன்ற சாமியார்களின் அட்டூழியங்களை வெளி கொண்டுவருவதே நமது நோக்கம்.

இந்த காமச்சாமியார் நித்யானந்தாவுக்கு ஹிந்துமுன்னணி பயங்கரவாத அமைப்பின் தலைவர் ராமகோபாலன் வக்கலாத்து வாங்கி பிபிசி செய்திக்கு பேட்டி அளிக்கும் போது கூறினார், "ஹிந்துமத பிரச்சாரகர் நித்யானந்தா சாமிகள் மீது கிராபிக்ஸ் செய்து செய்திகள் வெளியிட்டு," ஹிந்துமத பெருமைகளை கெடுக்க சதி செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

No comments: