Jun 29, 2011

இலங்கை போர் குற்றவாளிகளை தண்டிக்க இந்தியா உதவுமா?

JUNE 30, இலங்கையில் தமிழர்கள் மீது ராஜபக்சே அரசு நடத்திய தாக்குதலுக்கு,  பதிலடியாக இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் அனைத்தையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும்.

மேலும் தமிழக மீனவர்கள் மீது பயங்கரவாத இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களை பாதுகாக்க இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

உலக நாடுகள் பல போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டபோதும், 7 கோடி தமிழர்களை தன்னகத்தே குடிமக்களாக கொண்ட இந்திய அரசு ஒப்புக்குக் கூட போரை நிறுத்தச் சொல்லவில்லை.

தமிழின படுகொலைக்கு துணை போன இந்திய அரசு தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்தது. இதையெல்லாம் துடைக்க இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து, சர்வதேச நீதிமன்றம் மூலம் தண்டிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

No comments: