Jun 15, 2011

சமச்சீர் கல்வி அதிமுகவின் செயல்பாட்டால் குழப்பம் நீடிக்கிறது!

JUNE 16, அதிமுக அரசுக்கு தமிழக மாணவர்கள் நலனில் அக்கறை இல்லை என்பதால்தான் சமச்சீர் கல்விக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது என்று திமுக தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக அரசு மேற்கொண்டுள்ள முடிவால் பெற்றோர்கள், மாணவர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும் திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமச்சீர் கல்வி தொடர்பாக திமுக கூறியதை ஏற்க முன்வராவிட்டாலும், தோழமைக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சொல்வதையாவது ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.

அதுவே தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அவர்கள் செய்யும் நன்மையாக அமையும்.  கடந்த அரசின் முடிவிற்கு மாறாக வீம்பின் காரணமாக இந்த அரசு செயல்பட முயற்சிப்பதால் அரசிற்கு வீண்செலவு ஏற்பட்டுள்ளது.

No comments: