May 13, 2011

கேரள மாநில எஸ்.டி.பி.ஐ தலைவர் தேர்வு!!

May 14, கோழிக்கோடு: சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் கேரள மாநிலத் தலைவராக நஸ்ருதீன் எழமரம் கோழிக்கோட்டில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் நடந்த தேர்தலில் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் நாஸருத்தீன் கட்சியின் மாநில தலைமைச்செயலக உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார். தனிப்பட்ட காரணங்களால் வழக்கறிஞர் கெ.பி.முஹம்மது ஷெரீஃப் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத்தொடர்ந்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா தேர்தலை நடத்தினார்.

இத்தேர்தலுக்கு தலைவர் வழக்கறிஞர் கே.பி.முஹம்மது ஷெரீஃப் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்களான எம்.கே.மனோஜ்குமார், அப்துல்மஜீத் ஃபைஸி, துணைத் தலைவர்களான முவாற்றுப்புழா மெளலவி அஷ்ரஃப், அய்யப்பன் மாஸ்டர், பொருளாளர் சேம்குட்டி ஜேக்கப், வி.டி. இக்ராமுல் ஹக், நூர்ஜஹான், துளசீதரன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments: