May 8, 2011

பிளஸ் 2 தேர்வில் 1190 மார்க் எடுத்து மாணவி முதலிடம்!!

May 9, பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல் ராங்க் பெற்றுள்ளார்.

ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான இவர் ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் : 195, ஆங்கிலம் : 195
கணிதம் : 200, இயற்பியல் : 200, வேதியியல் : 200, உயிரியல் 200

ரேகாவின் தந்தை கேசவன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் மலர்விழி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்.

ரேகாவுக்கு ஒரே தங்கை, கிருத்திகா. கிருத்திகா பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், தங்கை, ஆசிரியர்கள், தோழிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரேகா, தனக்கு மருத்துவப் படிப்பு படிக்க விருப்பம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

No comments: