Feb 21, 2011

ஒரிசா அரசு பணிந்தது! மாவோயிஸ்டுகளின் கோரிக்கைகளுக்கு வெற்றி!!

புவனேசுவரம்,பிப்.21: மாவோயிஸ்டுகள் விடுத்த 14 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது ஒரிசா மாநில அரசு. மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. கிருஷ்ணா, பொறியாளர் பவித்ரா மஜ்சி ஆகிய இருவரையும் விடுவிப்பது தொடர்பாக அரசுக்கும், மாவோயிஸ்டு களுக்கும் இடையேயான 2-ம் நாள் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது மாவோயிஸ்டுகள் விடுத்த 14 கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு விட்டதாக அந்த மாநில உள்துறை செயலர் பெஹரா தெரிவித்தார். பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. அதைப்போல பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை மாவோயிஸ்டுகளும் விரும்பத்தகாதச் செயல்களில் ஈடுபடக்கூடாது.

முக்கிய மாவோயிஸ்டு தலைவர் ஸ்ரீராமுலு சீனிவாசுலு தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை ஒரிசா விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அளிக்க உள்ளது. இதனிடையே, தங்களை ஜாமீனில் விடுவிக்கக்கோரி மற்றொரு முக்கிய மாவோயிஸ்டு தலைவர் காண்டி பிரசாதம் உள்பட 5 பேர் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களது மனுக்களும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மாவட்ட ஆட்சியரையும், பொறியாளரையும் விடுவிக்க மாவோயிஸ்டுகள் விடுத்துள்ள கோரிக்கைகளில் கைதாகியுள்ள தங்களது இயக்கத் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை.

No comments: