
சென்னை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் கோரிக்கையை தி.மு.க., தரப்பில் கிண்டல் செய்ததால், காங்கிரஸ் ஐவர் குழு, கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், இரு கட்சிகளிடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தி.மு.க., மூத்த அமைச்சர் ஒருவர் காங்கிரஸ் குழுவினரிடம், "உங்களிடமும் உளவுத்துறை உள்ளது; எங்களிடமும் உளவுத்துறை உள்ளது. இரு கட்சிகளின் பலத்தையும், இருவரும் அறிவோம். வேண்டுமானால், கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள். அதில், நாங்கள் சேர்ந்து கொள்கிறோம். லோக்சபா தேர்தலில், நாங்கள் 200 இடங்கள் கேட்டால், நீங்கள் தந்து விடுவீர்களா? சும்மா மிரட்டாதீர்கள்' என கிண்டலாக கூறியுள்ளார். இதனால், காங். குழுவினர் வருத்தம் அடைந்து, பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதாக சில செய்திகளும், பேச்சுவார்த்தை தொடக்கத்திலேயே 53 இடங்கள் தான் தரப்படும் மேலிடத்தில் கேட்டு விட்டு வாருங்கள் என, தி.மு.க.,வினர் கூறியதால், பேச்சுவார்த்தையை தொடர முடியாமல் காங். குழுவினர் சென்றனர்' என்று சில செய்திகளும் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment