Feb 26, 2011

அட பாவமே!! லீக்குக்கு கிடைச்ச கெதியா இது!!

சென்னை, பிப்.26: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக்குக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர்மொய்தீன் இன்று சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். இந்த சந்தி்ப்புக்குப் பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காதர் மொய்தீன், வெற்றிகரமாக அமைந்துள்ள இந்தக் கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், கூட்டணியின் வெற்றிக்கு தாங்கள் பாடுபடப் போவதாகவும் கூறினார். ஐயோ பாவம்! கருணாநிதியை காலம் காலம் நம்பிய முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் லீக்குக்குமா இந்த கெதி. புதிதாக தொடங்கிய ம.ம.க. ஜெயலலிதாவிடம் 3 சீட்டு வாங்கிட்டர்களே! இது தான் நம்ம கருணாநிதி. ரொம்ப கருணை உள்ளவர். இவரு தமிழர் தலைவர் என்று சொல்லிவிட்டு ஈழ தமிழர்களை கொன்று குவிக்கும் பொது வேடிக்கை பார்த்தாரே அப்பவே இவர் சுயரூபம் தெரிந்துவிட்டது. கோவை கொலைகார போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, பொய்வழக்கு ஜோடித்த உளவு துறை அதிகாரிக்கு பதவி உயர்வு இதுதான் நம்ம கருணாநிதி.

No comments: