Jan 21, 2011

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் முரளிதரன்.

கொழும்பு, ஜன.21- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் (38) கூறியுள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இதைத் தெரிவித்தார். எனினும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவேன் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் தற்போது கொச்சி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: