Jan 7, 2011

அராஜக தீர்ப்பும் அதை எதிர்த்து மேல் முறையீடும்.

ராய்ப்பூர்,ஜன.8: தேசத்துரோகம் குற்றஞ்சாட்டி ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்றம் வழங்கிய ஆயுள்தண்டனையை குறித்து கேள்வி எழுப்பி மனித உரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக் சென் சத்தீஷ்கர் மாநில உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.சென்னின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கபடவில்லை என அவருக்காக வழக்கறிஞர் மஹேந்திர துபே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சுட்டிகாட்டியுள்ளார். கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி ராய்ப்பூர் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி பி.பி.வர்மா பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை தீர்ப்பளித்தார்.

No comments: