![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNyLxFKCHt_sXy6Fny5b-Sgb_IK_4AO4cfiiTOPpvxrTOia9fWGhbCyWaod2ODn4yDQAgyT6pJYZRpn79T7-Gl2f7NytchuNF4UYMKY6fVQs5FU6A8-2tA2AzPdPYdCOffzYxrE15Qig4/s320/italy_pm.jpg)
இரவு விடுதியில் நடனமாடும் 17 வயது இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி(74) செயல் குறித்து, போலீஸ் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மாஜிஸ்திரேட் முன்பும் புகார் செய்யப்பட்டிருக்கிறது. இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது பெண்கள் உடனான தொடர்பு, ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், இரவு விடுதியில் நடனமாடும் ரூபி ரூபாகுவோரி என்ற 17 வயது இளம்பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருட்டு வழக்கில் சிறை சென்றார்.பிரதமர் பெர்லுஸ்கோனி தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை விடுதலை செய்தார்.
அதிபர் வீட்டில் நடந்த நடன நிகழ்ச்சியில் இந்த ரூபி என்ற இளம் பெண் பங்கேற்றதாகவும், அந்த இரவைக் கழித்த பின் அவருக்கு 7,000 யூரோ (இந்திய ரூபாயில் ரூ.3.5 லட்சம்) தந்ததாகவும் அப்பெண்ணே அளித்த பேட்டி விசாரணை, முக்கியத்துவம் பெறக் காரணமானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மிலன் நகர போலீசார் இது குறித்து விசாரிக்கத் துவங்கியதும் பெர்லுஸ்கோனி தலையிட்டாராம். இதையடுத்து, தற்போது ரூபியுடனான உறவு குறித்து விளக்கம் கேட்பதற்காக பெர்லுஸ்கோனிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்
2 comments:
bdszg
அவன் என்ன செய்தாலும் அந்த நாடு உருப்பட்டு தான் இருக்கு .....உங்களோட உத்தம புத்திரன் கிழட்டு பு........ மன்மோகன் எதை செய்து கிழிச்சான்....
Post a Comment