Jan 22, 2011

குழந்தைகளை எரித்து கொல்லும் அளவுக்கு இவர்கள் எப்படி கொடூரமானவர்களாக மாற்றபடுகிறார்கள்!! ஒரு ஆய்வு கட்டுரை.


புதுடெல்லி,ஜன.22:ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் மற்றும் அவருடைய 2 மகன்களை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கில் தாரா சிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி சி.பி.ஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஒரிஸாவில் கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸ், அவருடைய 2 மகன்கள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தாராசிங்குக்கு கீழ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாராசிங் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த ஒரிசா உயர்நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்தது. தாராசிங்குக்கு மரண தண்டனை விதிக்கும்படி கோரியது. இந்த வழக்கை நீதிபதிகள் சதாசிவம், பி.எஸ்.சவுகான் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று அறிவித்தனர். அதில், 'அரிதிலும் அரிதான' வழக்கில் மட்டுமே குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கு அந்த பிரிவில் வரவில்லை. எனவே, குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. சி.பி.ஐ மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் செல்வியின் கட்டுரை (சிந்திக்கவும்): இந்த குழந்தைகள் என்ன குற்றம் செய்தன? எப்படி குழந்தைகளை எரித்து கொல்லும் அளவுக்கு இவர்கள் கொடூரர்களாக மாற்றபடுகிறார்கள். இதுதான் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் மூளை சலவை. இவர்கள் ஹிந்து மதத்தை வளர்கிறோம், ஹிந்துக்களுக்கு என்று ஒரு நாடு அதுதான் இந்தியா என்று கூறி அப்பாவி ஹிந்து வாலிபர்களை தங்கள் வலையில் வீழ்த்தி அவர்களுக்கு தீவிரவாத பயிர்ச்சி கொடுக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சுமார் ஐம்பது ஆயிரம் முழுநேர உழியர்களை கொண்டது. முழு நேர உழியர்கள் என்றால் என்ன? இந்த முழு நேர உழியர்கள் திருமணமே செய்து கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவது. இவர்கள் வேறு எந்த வேலைக்கும் போக மாட்டார்கள். தங்கள் இயக்க வேலையை மட்டுமே செய்வார்கள். இன்னும் தெளிவாக செல்லனும் என்றால் தங்கள் உடல், பொருள், ஆவி, எல்லாம் தங்களது இயக்கத்தை பரப்புவதே என்ற அளவுக்கு தீவிரமாக செயல்படுவது. இப்படியாக இந்த முழுநேர உழியர்கள் இந்தியா முழுவது சுற்றி திரிந்து ஹிந்து வாலிபர்களை தங்கள் வலையில் விழவைகிறார்கள். பின்னர் அவர்களுக்கு சிந்தனை ரீதியான பயிற்சி, உளரீதியான பயிற்சி, ஆன்மீக பயிற்சி, ஆயூத பயிற்சி, உளவு பயிற்சி இப்படி கடுமையான பயிற்ச்சிகள் கொடுக்கபடுகிறது.

இவர்களுக்கு பயிற்சி கொடுபதற்க்கு என்றே இந்தியா முழுவது பயிற்சி கேந்திரங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்துகிறது. ஒரு நாள், மூன்றுநாள் பயிற்சி கேந்திரங்கள் அந்த அந்த மாநிலங்களில் உள்ள பயிற்சி கேதிரங்களில் நடக்கிறது. இங்கு பயிற்சிகளை வெற்றிகிரமாக முடித்தவர்களுக்கு மத்திய பயிற்சி கேந்திரத்தில் பயிற்சி அளிக்கபடுகிறது. மத்திய பயிற்சி கேந்திரங்களை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களான ராஜஸ்தான், உத்திர பிரதேசம், ஒரிசா, கேரளா போன்ற மாநிலங்களில் நடத்தபடுகின்றன. இதன் மூலம் அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி கொடுக்கபடுகிறது. மேலும் இவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கபடுகிறது. இவர்களுக்கு ஆயூத பயிற்சி அளிப்பது இந்தியாவின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் என்பது அதிர்ச்சியான உண்மை. இந்தியாவின் பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும், நீதிபதிகளும் பிற்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் உறுபினர்கள் என்பது உண்மையோ உண்மை.

உலகில் இஸ்ரைளின் உளவுத்துறையான மொசாதுக்கு அடுத்தபடியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உளவுத்துறை நாம் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு வலிமையான உளவுத்துறையை தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்கள் பத்து முதல் இருபது பெயர் கொண்ட ஒரு குழு இதை இவர்கள் ஒரு அணி என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒருதலைவர் என்றமுறையில் இவர்களது அடிமட்ட செயல்பாடு ஆரம்பம் ஆகிறது. குறைந்த பட்சம் ஒரு வூரில் பத்து முதல் ஐம்பது அணிகள் வரை இவர்களுக்கு இருகின்றன. இவர்கள் தான் அந்த வூரில் என்ன நடக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றார்கள்.

இப்படி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பயிற்ச்சி கூடங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு முஸ்லிம் மற்றும் சிறுபான்மை எதிர்ப்பு, வெறுப்பு என்பவை போதிக்கப்படுகிறது. எனவே இவர்கள் அன்றாடம் வாழ்வில் நடக்கும் சிறிய விசயங்களையும் மத கண்கொண்டு பார்கிறார்கள். எப்படியெல்லாம் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மை மக்களோடு பிரச்சனைகளை உண்டாக்கி அதை கலவரங்களாக மாற்றுவது என்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். கொடுக்கல் வாங்கல் முதல் வியாபார பிரச்சனைகள் வரை மனிதன் அன்றாடம் வாழ்வில் நடக்கும் பிரச்சனைகளை ஹிந்து முஸ்லிம் பிரச்சனை போல் சித்தரித்து இவர்கள் ஒரு ஆதரவு கரம் நீட்டுவது போல் அந்த விஷயங்களுக்குள் வந்து ஒரு பெரும் கலவரம் நடக்க காரண கர்தாவாகிரார்கள்.

கலவரம் செய்வதில் இவர்கள் வல்லவர்கள். ஏன் என்றால் இவர்களிடம் ராணுவ ரீதியில் தாயாரிக்க பட்ட ஒரு படை ஆயூதங்களுடன் ரெடியாக ஒரு தலைமையின் கீழ் முறைபடுத்தப்பட்ட சிறு குழுக்களாக இருந்து செயல்படுகிறது. இவர்கள் கலவரங்களை திட்டமிட்டு நடத்திவிட்டு ஒளிந்து கொள்வார்கள். பாதிக்க பட்ட சிறுபான்மை தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக முறைப்படி தெரியபடுத்த வீதிகளுக்கு வரும்போது இந்திய கையாலாகாத காவல்துறை இவர்களை பிடித்து குண்டர் தடுப்பு சட்டத்திலும், போடாவிலும், இன்னும் பல ஆள்தூக்கி சட்டங்களிலும் சிறையில் தள்ளி மொத்த கலவரங்களுக்கும் இவர்கள் தான் காரணம் போன்ற ஒரு மாயை தோற்றுவித்து விடுகிறார்கள். இவர்களுக்கு துணையாக இந்த பாசிச சிந்தனை உள்ள பத்திரிக்கைகளும் இந்த பிரச்சனிகளை தலைப்பு செய்திகளாக்கி பூதகரமாக்கி முஸ்லிம் விரோத சிந்தனையை வளர்கின்றன. மக்கள் விழிப்புடன் செயல்படவேண்டிய காலம் இது. இந்த ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத சிந்தனையில் மக்கள் விழுந்துவிடாமல் அந்த பாசிச ஹிட்லர் சித்தாந்தத்தை இந்த மண்ணை விட்டு விரட்டுவது ஒவ்வொரு இந்தியனது கடமை.

நன்றி : தமிழ் செல்வி.

No comments: