Jan 13, 2011

இலங்கையில் கனமழை வெள்ளம் பலி 21 ஆக உயர்வு.

கொழும்பு, ஜன.13: இலங்கையில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி மேலும் 3 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து கனமழைக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கனமழையால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிழக்குப் பகுதி மாகாணங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இலங்கையின் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் இதைத் தெரிவித்துள்ளது.

No comments: