Jan 16, 2011
10,000 ஆணிகள் கொண்ட படுக்கையில் பரதம் ஆடி சாதனை.
திருச்சி : 'பத்தாயிரம் ஆணிகள் கொண்ட இரும்பு முள் படுக்கையில் நடனமாடும் வகையில், என் கால் பாதங்களை பழக்கப்படுத்த கடும் பயிற்சி எடுத்துக் கொண்டேன் என இளம் பெண் பூர்ணி கூறினார். மலேசியா நாட்டின் பேராக் மாநிலத்தைச் சேர்ந்தவர், இருதயம் செபஸ்தியார். திருச்சி மாவட்டம் சமயபுரம், நரிமேட்டைச் சேர்ந்த இவரது அப்பா அந்தோணி, 1946ம் சமையல் வேலைக்காக மலேசியா சென்றார்; அங்கேயே குடியுரிமை பெற்றார். செபஸ்தியாரின் கலைக் கூடம்' என்ற பெயரில், 20 ஆண்டாக தமிழ் கிராமிய கலை நிகழ்ச்சிகளை, மலேசியாவில் செபஸ்தியார் நடத்தி வருகிறார். முள் படுக்கையில், 40 அடி உயரத்தில் கரகாட்டம், என்று சாதனை படைத்த செபஸ்தியாருக்கு, "ஆசியாவின் வியப்புகுரிய சாதனை' பட்டியலில் இடம்பெற்றுள்ளார். செபஸ்தியாரின் கலைக்குழுவில் இடம்பெற்றுள்ள 450 கலைஞர்களில், அவரது வளர்ப்பு மகளான பூர்ணியும் (19) ஒருவர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment