Dec 25, 2010

அத்வானியுடன் நீரா ராடியாவுக்கு தொடர்பு.

டெல்லி,டிச,26:காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிசேக் சிங்வி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது பா.ஜ.க. தலைவர் அத்வானிக்கும் தரகர் நீரா ராடியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறினார். நீரா ராடியா நடத்தும் அறக்கட்டளைக்கு டெல்லி வசந்த்கஞ்ச் பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் அத்வானி கலந்து கொண்டார். அப்போது நீரா ராடியாவை அத்வானி பாராட்டினார் என்றும் அபிசேக் சிங்வி குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில்தான் சுவிஸ் வங்கியில் ராடியா கணக்கு தொடங்கினார். அவருக்கு அத்வானி அனுமதி கொடுத்தார். சுவிஸ் வங்கி கணக்கில் நீரா ராடியா மட்டும்தான் பணம் போட்டுள்ளாரா? அல்லது அவருடன் சேர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் பணம் போட்டுள்ளார்களா? என்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

No comments: