Dec 16, 2010

பத்திரிகை புகைப்படகாரருடன் தள்ளு முள்ளு

பெங்களூர் : பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கில் ராமநகரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தா ஆஜரானார்.

பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு போன்ற குற்றங்களுக்காக ஐந்து பிரிவுகளில் நித்யானந்தா மீது பெங்களூர் அருகேயுள்ள பிடதி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நித்யானந்தா உள்ளிட்ட ஐந்து பேர் மீது சிஐடி போலீஸôர் ராமநகரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நவம்பர் 27-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நித்யானந்தாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்பேரில், நித்யானந்தா தனது சீடர்கள் பக்தானந்தா, சச்சிதானந்தா ஆகியோருடன் வியாழக்கிழமை காலை ராமநகரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பவதி முன்பு ஆஜரானார். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நித்யானந்தாவை படம் பிடிக்க பத்திரிகை புகைப்படக்காரர்கள் முயற்சித்தபோது, அவரது சீடர்கள் சிலர் தடுக்க முயன்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவானது. போலீஸôர் தலையிட்டு நிலைமையைச் சரிசெய்தனர்.

No comments: