Dec 16, 2010

தமிழகத்தில் சி.பி.ஐ., சோதனை நடந்த இடங்கள் விவரம்

1. நிரா ராடியாவின், "வைஷ்ணவி கம்யூனிகேஷன்' சென்னை அலுவலகம்.
2. "டிராய்' முன்னாள் தலைவர் பிரதீப் பைஜாலின் சென்னை வீடு.
3. "தமிழ் மையம்' அமைப்பாளர் ஜெகத் கஸ்பர் அலுவலகம்.
4. வார இதழ் இணை ஆசிரியர் காமராஜின் சென்னை வீடு.
5. பல்கலை பேராசிரியர் அகிலன் ராமநாதனின் வீடு.
6. திருச்சியை சேர்ந்த, "டிவி' நிருபர் நரசிம்மன் வீடு.
7. திருச்சி திருவானைக்காவலில் உள்ள ராஜாவின் அண்ணன் ராமச்சந்திரன் வீடு.
8. திருச்சியில் உள்ள ராஜாவின் சகோதரி சரோஜா வீடு.
9. பெரம்பலூரில் உள்ள ராஜா வீடு.
10. பெரம்பலூரில் உள்ள ராஜாவின் நண்பர் சுப்பிரமணி வீடு.
11. ராஜாவின் ஆடிட்டர் கணபதி சுப்ரமணியன் சென்னை வீடு.
12. முதல்வர் கருணாநிதியின் துணைவி, ராஜாத்தி மற்றும் கனிமொழியின் ஆடிட்டர் ரத்தினம் வீடு. இவை உட்பட தமிழகத்தில் 27 இடங்களில், சி.பி.ஐ., சோதனை நடந்துள்ளது.

சி.பி.ஐ., ரெய்டு வெறும் கண்துடைப்பு நாடகம்: " 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, நாடு முழுவதும் சி.பி.ஐ., நடத்திவரும் ரெய்டு, வெறும் கண்துடைப்பு நாடகம்' என, பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நிரா ராடியா உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில், நாடு முழுவதும் 34 இடங்களில் சி.பி.ஐ., நேற்று ரெய்டு நடத்தியது. இது குறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது: ஊழல் புகார்கள் எழுந்து ஒரு ஆண்டிற்கு மேல் ஆனநிலையில், அவர்கள் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை தங்களது வீடுகளில் வைத்திருக்க மாட்டார்கள். எனவே, இது சற்று விசித்திரமான ரெய்டு; இதன் மூலம், எந்த ஒரு ஆவணங்களையும் கைப்பற்ற முடியாது. "2ஜி' ஊழல் விவகாரத்தில், நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மக்களிடையே காட்டுவதற்காகவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. எனவே, இது வெறும் கண்துடைப்பு நாடகம் தான். ஏற்கனவே சி.பி.ஐ., நடத்திய ரெய்டின்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ராஜிவ் பிரதாப் ரூடி கூறினார்.

No comments: