Dec 24, 2010

விபச்சாரம்,.. புரோக்கர்கள் கைது

கொடைக்கானலில் விபச்சாரம் செய்த மூன்று புரோக்கர்கள், ஆந்திரா,கர்நாடகாவை சேர்ந்த ஏழு பெண்களை போலீசார் கைது செய்தனர். செண்பகனூரை சேர்ந்த டேவிட்(32) இவர் நடந்து செல்லும் போது, பெரியகுளம் பருப்புபட்டி சேர்ந்த சந்தோஷ்(32), கம்பத்தை சேர்ந்த கார்த்திக் என்ற செந்தில்(32), ஆந்திரா ரித்திஸ்(21) ஆகியோர் அவரிடம் லேக்ஏரியாவில் பங்களாவில் பெண்கள் இருப்பதாக கூறிவிபச்சாரத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு கர்நாடகா, ஆந்திரா, ஈரோடு, கரூரை சேர்ந்த ஏழு பெண்கள் இருந்தனர்.

இதுகுறித்து டேவிட் கொடைக்கானல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் சோதனை மேற்கொண்டு, புரோக்கர்களையும், பெண்களையும் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கார், மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, ஏழு பெண்களையும் விபச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கி, அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். புரோக்கர்கள் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.