Dec 18, 2010

அஜ்மீர் குண்டு வெடிப்பு ... திக்விஜய் சிங்

புதுடில்லி:டில்லியில் காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியதாவது:அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் சுனில் ஜோஷி. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர். 2007ல் மத்திய பிரதேசத்தில் இவர், தனது சக நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டார். குண்டு வெடிப்பு பின்னணி குறித்து சுனில் ஜோஷிக்கு அனைத்து விவரங்களும் தெரியும். இதனால் தான் அவரை கொலை செய்து விட்டனர். எனவே, இதன் பின்னணி குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சுனில் ஜோஷியின் கொலை வழக்கை மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

முஸ்லிம் என்பதால் எரிக்கப்பட்டவர்கள்

ஜனநாயகத்தை உச்சரித்துக்கொண்டு குஜராத்தின் ஃபாசிச நரேந்திர மோடி அரசு எப்படி இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையிலும் மனித உரிமை மீறல்களிலும் தனது காவல்துறையையும் இராணுவத்தை ஈடுபடுத்தி எப்படி முஸ்லிம்களை அழித்தார்கள் என்பதை விளக்குகின்றது இப்படம்.

No comments: