Dec 14, 2010

நித்யானந்தா சீடர்கள் இருவர் தலைமறைவு

பெங்களூரு : ""சாமியார் நித்யானந்தாவின் பெண் செயலர் உட்பட இருவர் தலைமறைவாகி விட்டனர்,'' என, சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., யோகப்பா தெரிவித்தார். 16ம் தேதி(நாளை) நித்யானந்தா உட்பட, ஐந்து பேர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா மற்றும் அவரது சீடர் பக்தானந்தா ஆகியோர் சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யபட்டனர். 53 நாள் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளனர். சாமியார் நித்யானந்தா மீது ராம் நகர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், சாமியார் நித்யானந்தாவுக்கு எதிரான ஆதாரங்களை அழித்ததாக அவரது செயலர் சச்சிதானந்தாவை சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். அவரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மேலும் இந்த வழக்கில் ராம்நகர் நீதிமன்றத்தில், குற்றப் பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். அதில் சதானந்தா (எ) தனசேகர், மா.சச்சிதானந்தா (ராகினி) ஆகியோரை இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சி.ஐ.டி., போலீசார் சேர்த்திருந்தனர். ஆனால், இவர்கள் கைது செய்யபடவில்லை. விசாரணைக்காக பல முறை அவர்களை சி.ஐ.டி., போலீசார் அழைத்தும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பிடதி ஆசிரமத்தில் அவர்கள் இல்லை என, சி.ஐ.டி., தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இம்மனுவை விசாரித்த நீதிபதி, பிடதி ஆசிரம செயலர்கள் சதானந்தா (எ) தனசேகர், மா.சச்சிதானந்தா (எ) ராகினி ஆகியோர் மீது கைது வாரன்ட் பிரபித்து அவர்களை வரும் 16ம் தேதி(நாளை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், கைதாகி ஜாமீனில் இருக்கும் சாமியார் நித்யானந்தா, அவரது சீடர் பக்தானந்தா, அவரது செயலர் சச்சிதானந்தா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார். நித்யானந்தா தரப்பில், தங்கள் மீது சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்துள்ள குற்பத்திரிகையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக சி.ஐ.டி., போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். சி.ஐ.டி., போலீஸ் எஸ்.பி., யோகப்பா கூறுகையில், "நித்யானந்தா செயலர்கள் சதானந்தா, மா.சச்சிதானந்தா இருவரும் பிடதி ஆசிரமத்தில் இல்லை. அவர்கள் தலைமறைவாகி விட்டனர்' என்றார்.

1 comment:

Anonymous said...

Muslimgal seithaal athu sunnath ,, ivar seithaal ungalukku seithi .. enna kodumaii ithu ??

Bombayil Vatpunarvu seitha baba enge ??
Avar Muslim Thane ? Avarai patrii ezhuthungal ..