Dec 14, 2010

விக்கிலீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்க இயலாது : ஐ.நா பிரதிநிதி.

கான்பெர்ரா,டிச.13:ரகசிய விபரங்களை வெளியிட்டதற்காக விக்கிலீக்ஸ் மற்றும் அதன் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜா மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் பிரிவுகள் இல்லை என கருத்து சுதந்திர பாதுகாப்பிற்கான ஐ.நாவின் சிறப்புத் தூதர் பிராங்க் லாரியூ தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி டுடேக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆனால், விக்கிலீக்ஸ் ஒரு ஊடகம் என்ற நிலையில் செயல்பட்டதை குற்றம் சொல்லமுடியாது. தகவல்களை பரிமாறுவதில் பொறுப்பேற்க தேவையில்லை என்பது பொதுவான தத்துவமாகும். வெளியிடும் விபரங்கள் தெளிவாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறினாலோ, ஏதேனும் நபர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை விளைவித்தாலோ தான் இக்காரியத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளியிடும் தகவல்களால் ஒரு அரசுக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது என்பதற்காக மட்டும் அதனை தடைச்செய்வதற்கோ, நடவடிக்கை மேற்கொள்ளவோ இயலாது என பிராங்க் மேலும் கூறினார்.

நன்றி :செய்தி தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: