Dec 1, 2010

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பற்றிய நூல்: வைகோ வெளியிட்டார்.

டெல்லியில் நடந்த வைகோவின் Yes ; we Can என்ற புத்தக வெளியீட்டு விழாவில் வைகோவை பிறவி போராளி என காஷ்மீரின் பாரூக் அப்துல்லா விளித்துள்ளார்."Yes we Can" என்ற இந்த புத்தகம் அமெரிக்காவின் கருப்பு இன தலைவர் இப்போதைய அதன் அதிபர் ஒபாமாவை பற்றியது. அவரது வாழ்க்கை வரலாற்றை கூறும் நூலாக வைகோ இதனை மதிமுக வின் வார இதழான சங்கொலியில் எழுதினார்.

மேலும் இந்த விழாவில் பங்கேற்று கொண்டு பேசிய, பஞ்சாப் துணை முதல்வர் பாதல் , வைகோ தமிழர்களிர்க்காக தம் அரசியல் பணிகளில் பலவாறு தியாகங்களை செய்துள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.மேலும் இந்த விழாவில், ஹர்யான முன்னாள் முதல்வர் ஒம் பிரகாஷ் சவுதாலா, தெலுகு தேசம் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் நம்ம நாகேஸ்வர ராவ் மற்றும் அதிமுகவின் தம்பிதுரை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments: