![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGBSQVLJHgMRylnUepnKHGGQcLT65qS399NUFrMJl21_KIQLt6cFYgXnn9aT7xq5jo27e1Fu_6LF27NrxfQV5_Tz_nllyhvEbexJ0BAUEag31VBNPRAbbqOYUxSiLy6COHr7B1oD6zLUk/s320/Running.jpg)
பொதுமக்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் எதிர்வரும் நவம்பர் 21 ம் தேதி முதல் நவம்பர் 28, 2010 வரை நாடு முழுவதும் நடைபெறும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF_wQ35a3cGQ0bannmpYk_ygjZrH9LqzStKw_N0jUsNqfNmPFkC32LikmM_lPB6-tMXdudBrOCgLQZi-0m9MqdilNTr-KA73Jh18yaPhh4FKiw8YUNAkImRvwWFBZlIjzFsMrwXX8ZmXQ/s320/MOV0075699.jpg)
உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் சுற்றுப்புற சூழலை தூய்மையானதாக மாசற்ற ஆரோக்கியமான நிலையில் வைத்திருப்பதில் பொதுமக்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் Healthy People Healthy Nation" என்ற முழக்கங்களோடு பிரச்சாரம் நடைபெறும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEa7FkeRpd7llyrB36mBdSPt47cQJ2VzYkiLbgvCex2oG-jfAqY4fvlLQcuPQraxqRdXhJL8x1DXHouVsssFspPmxxfG00wN3hlh97vZKvvCn0doRsVgVyRcp08X7_H92X2LD9RZZeTBI/s320/MOV00755590.jpg)
பாப்புலர் பிரண்ட் செயல்வீரர்கள் இருக்கும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகள், நோய்த்ததடுப்பு முறை, யோகா பயிற்சி, உடற்பயிற்சி, சரியான உணவு பழக்க வழக்கங்கள் பற்றிய பயிற்சி வகுப்புகள் மற்றும் செயல் விளக்க கூட்டங்கள் ஆகியவை உள்ளடக்கியிருக்கும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1GKiL_19YPWalw1S5BqPpP6XiViLtd9L4sW5frzmIi5tlbEqSToNl3s_CNtmq_ie434gNbYcTovMzvgV2q-gcpjtO0iUivNQN_8TbPLuMdXCxsHzSTz0Z5vYljtiPwhi0spA9Y6q2gYM/s320/Book%252520release_0.jpg)
விளையாட்டு நிகழ்ச்சிகள் பொது இடங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் துப்புரவுப்பனிகள் , ஆவணப்பட காட்சிகள் , தெருவோர நாடகங்கள் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்துவதென திட்டமிடப்பட்டுள்ளது .இத்தகைய பொது நிகழ்சிகள் உள்ளூர் கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து அவர்களின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தின் பொது சுகாதார திட்டங்களை, முயற்சிகளை வலுப்படுத்தும் விதத்தில் பிரசாரம் அமையும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFtPUO8xU9ZLSJyZSr8Jn4IuGTzRgaBDl07F-cXYPwAOBGiCxrXCAxk4CAeg9J8ZkpUxkc32IeJqFfMWkj_pEHiR_EyjLNp3ryzMasUrWiXB8zSnwCBqWf_PDxlgiZjrMefWVxRyTfztQ/s320/P1100965.jpg)
இது தொடர்பான விளம்பரங்கள் புத்தகங்கள் மற்றும் போஸ்டர்கள் ஆங்கிலம் ஹிந்தி, உர்து, பெங்காலி கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மணிப்பூரி போன்ற பல்வேறு மொழிகளில் அச்சிட்டு வெளியிடப்படும் . நாடுதழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது கடந்த ஆண்டு 2009 அக்டோபர் மாதம் நடத்திய பிரச்சாரம் பெருவாரியான மக்களின் பங்களிப்பையும் ஆதரவையும் வரவேற்பையும் பெற்றது
No comments:
Post a Comment