Sep 25, 2010

'நாய்க்கு தீட்டு': இந்த நூற்றாண்டிலும் ஹிந்து மதத்தில் தலைவிரித்தாடும் ஜாதி கொடுமை.


இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில கிராமம் ஒன்றில் உயர் சாதிக்காரர் வளர்த்த ஒரு நாய்க்கு தலித் பெண்ணொருவர் உணவளித்ததற்காக அப்பெண் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஒரு சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை செய்துவருகின்றனர்.மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் மாலிக்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தன் வீட்டுக்காரருக்கு கொடுத்தது போக எஞ்சிய ரொட்டித் துண்டுகளை அருகே நின்ற நாய்க்கு தான் கொடுத்ததாக சுனிதா ஜாதவ் என்ற தலித் பெண் கூறினார்.தான் நாய்க்கு உணவு கொடுத்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்த அந்நாயின் உரிமையாளர் அம்ருத்லால் கிராரி ஆத்திரம் அடைந்து, நீ சாப்பாடு போட்டதால் இப்போது அந்த நாயும் தீண்டத்தகாத ஜென்மமாகிவிட்டது என்று கத்தியதாக அப்பெண் குற்றம்சாட்டுகிறார்.

நாயை தன் வீட்டின் வெளியிலேயே கட்டிப் போட்டுவிட்டு அம்ருத்லால் சென்றுவிட்டதாக அப்பெண் தெரிவிக்கிறார்.பின்னர் கிராம பஞ்சாயத்து கூடி அந்த நாய்க்கு தீட்டுப் பட்டுவிட்டது என்று கூறியதாகவும் அதற்காக நாயின் உரிமையாளர் கிராரிக்கு தான் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் சுனிதா ஜாதவ் குற்றம்சாட்டுகிறார்.

இந்தப் பெண் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். சுனிதா கொடுத்த ரொட்டியை உண்ட நாயின் உடம்பு கெட்டுப்போனதால், உடல் நலத்தை தேற்றி அனுப்பச்சொல்லி கேட்டுக்கொண்டு அந்த நாயை சுனிதாவிடமே விட்டுவிட்டு வந்ததாக அம்ருத்லால் கிராரி தரப்பில் கூறப்படுகிறது.

சிந்திக்கவும்: இந்த நவீன ஹைடெக் விஞ்சான யூகத்திலும் ஹிந்து மதத்தில் கொடூரமாக ஜாதிகொடுமை கடைபிடிக்கபடுகிறது. ஒரு நாய்க்கு தலித் சமூக பெண் ரொட்டி துண்டு போட்டால் என்ற காரணத்தினால் அந்த நாய்க்கு தீண்டாமை வந்துவிட்டது கூறி, அந்த நாய்க்கு தீட்டு கழிக்க அந்த பெண்ணுக்கு 15 ஆயிரம் ருபாய் அபராதம் போட்டிருப்பது மிகவும் ஒரு கொடுமையான செயல். இது கற்காலத்தையும் மிஞ்சும் செயல் ஆகும். இந்த இராமாயண, இதிகாச கற்பனை கதைகளின் நாயகர்கள் இதை தீர்க்க என்ன செய்ய போகிறார்கள். ஒ இதை உண்டாகியவர்களே இவர்கள் தானே! இந்த ஹிந்து உயர் ஜாதிகாரர்கள், வர்ணாசிரம கொள்கையை ஆதரிக்கும் ஹிந்து பாசிசவாதிகள் இதை மழுப்ப ஆயிரம் காரணம் சொல்வார்கள். இந்தியாவை ஹிந்து நாடக்க போகிறோம் என்று கன்னியாகுமரி முதல் ஆப்கானிஸ்தான் வரை அகண்ட பாரதம் அமைப்போம் என்று மத கலவரங்களை உண்டாக்கி ரத்தம் குடிக்கும் கவி பயங்கரவாத கூட்டம் இதற்க்கு என்ன சொல்லபோகிறது. எங்கே போனார்கள் இந்த ஹிந்துமத காவலர்கள் அத்வானியும், வாஜ்பாயும், முரளிமனோகர் ஜோசியும், மோகன் பகத்தும். இந்த வர்ணாசிரம ஹிந்துமத ஜாதிகொடுமையை ஒழிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.

4 comments:

Anonymous said...

YOUR BLOG IS VERY NICE. KEEP IT UP.

Anonymous said...

WE LIKE YOUR BLOG

Anonymous said...

உங்களுடைய இணையத்தளம் ஹிந்து பாசிச சக்திகள் இந்தியாவில் உண்டாக்கும் பிரச்சனைகளை படம் பிடித்து காட்டுவதாக உள்ளது.

Anonymous said...

உங்களது பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.