Sep 6, 2010

சீனா விவகாரத்தில் போதிய முன்னெச்சரிக்கை தேவை: பிரதமர் மன்மோகன் சிங்.


புதுதில்லி, செப்.6- சீனா விவகாரங்களில் போதிய முன்னெச்சரிக்கையுடன் நாம் செயல்படுவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.தில்லியில் இன்று பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனினும், சீனாவுடனான பிரச்னைகளில் அமைதியான தீர்வு ஏற்படும் என்கிற நம்பிக்கை உள்ளது என்றும், இருநாட்டு உறவு என்பது போட்டி மற்றும் நட்பு கலந்ததாக தொடர்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

காஷ்மீர் மற்றும் விசா தொடர்பான விவகாரங்களில் சீனா சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டு வரும் நிலையில், பிரதமர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

No comments: