Jul 30, 2010

குஜராத் முதல்வர் தீவிரவாதி மோடியை பிடிக்க சிபிஐக்கு தைரியம் உண்டா? லல்லு பிரசாத் கேள்வி.

டெல்லி,ஜூலை29:ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லல்லு பிரசாத் இன்று(வியாழன்) பாராளுமன்றத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கூறியாதவது; அமித் ஷா ஒரு கோழிக்குஞ்சு. குஜராத் முதல்வர் மோடிதான் கோழி. கோழியை பிடிக்கும் தைரியம் சிபிஐக்கு உண்டா?"

மேலும் "தீவிரவாதி மோடி கைது செய்யப்பட்டால் அதில் அர்த்தம் இருக்கிறது. அமித் ஷா அவரது அடியாள் மட்டுமே. அமித் ஷா தன்னிச்சையாகச் செயல்படவே முடியாது" என்றார்.
புதன்கிழமை சிபிஐ அமித் ஷாவிடம் விசாரணையைத் தொடங்கியது. அஹமதாபாத்திலுள்ள சபர்மதி சிறையில் நடந்த இந்த விசாரணையில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அமித் ஷா சொன்ன பதில் "தெரியாது".

No comments: