Jul 28, 2010

தோழர் ஆசாத் படுகொலையும், இந்திய அரசின் கோரமுகமும்.

சுவாமி.அக்னிவேஷ் கடந்த மே,2010லிருந்து இந்திய அரசிற்கும், மாவோயிசுட்டுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி வருபவர். இது வரை இரண்டு தரப்புகளும் இரண்டு கடிதங்களை இவர் மூலம் அனுப்பி உள்ளனர். சூன் 26 அன்று இவர் அரசு தரப்பிலிருந்து வந்த மூன்றாவது கடிதத்தை மாவோயிசுட்டுகளின் தலைமைக்குழுவில் உள்ள ஆசாத்திடம் கொடுத்து விட்டு, அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருந்தார். அக்னிவேஷ் கூறுகையில் “நான் அவர்களிடம் (மாவோயிசுட்டுகளிடம்) இருந்து அமைதி பேச்சு வார்த்தை துவங்குவதற்கான தேதியை எதிர்பார்த்து காத்திருந்தேன்”. ஆனால் அவருக்கு வந்த செய்தியோ வேறு. மாவோயிசுட்டு தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்திவரும் ஆசாத் ஆந்திராவின் காட்டுப் பகுதியில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதே அந்த செய்தி.

“ஆசாத் அரசின் மூன்றாவது கடித்தை பெற்றதனால் தனது மெய்பாதுகாவலர்களை விலக்கிக் கொண்டிருக்கலாம்”, மேலும் “ஆசாதின் படுகொலை நமக்கு எல்லாம் பேரிழப்பு, ஏனென்றால் ஆசாத் மாவோயிசுட்டுகளால் அமைதி பேச்சு வார்த்தைக்கு நியமிக்கப்பட்டவர். இதனால் அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு பெரிய தடை ஏற்பட்டுள்ளது” என்றார் அக்னிவேஷ்.
ஆனால் உள்துறை அமைச்சகமோ வேறொரு பார்வையை கொண்டுள்ளது. “இந்த படுகொலை அமைதி பேச்சிவார்த்தையில் எந்த ஒரு தடையையும் ஏற்படுத்தாது. மாவோயிசுட்டுகளிடம் இருந்து அமைதி பேச்சுவார்த்தையை நோக்கி எந்த ஒரு சமிஞையும் எங்களுக்கு வரவில்லை” என்கிறார் உள்துறை செயலர். பிள்ளை.

ஆசாத் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு மாவோயிசுட்டுகள் மத்திய ஆயுதப் பிரிவைச்(CRPF) சேர்ந்த 27 காவலர்களை கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் மாவோயிசுட்டுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றும் எடுத்து கொள்ளலாம். அக்னிவேஷ் மூலம் நடைபெற்ற திரைமறைவு பேச்சு வார்த்தை மூலம் நடைபெற்று வரும் வன்முறையை நிறுத்தி அமைதி பேச்சுவார்த்தை தொடங்க ஒரு நாள் குறிப்பிடப்படவேண்டும். அப்படி ஒரு நாள் குறிப்பிடாத பட்சத்தில் இரண்டு தரப்புகளும் தங்களது போரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். ஆசாத் படுகொலை செய்யப்பட்டு அதே வாரத்தில் லால்கரில் 5 மாவோயிசுட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும் மாவோயிசுட்டு ஆத‌ர‌வாள‌ர்க‌ள் என்று க‌ருதப்ப‌ட்ட‌ ப‌ல‌ர் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். ஆதிவாசி பெண்க‌ள் பாதுகாப்பு ப‌டையின‌ரால் க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌டும் நிக‌ழ்வுக‌ளும் தொட‌ர்ந்து கொண்டு தான் உள்ள‌ன‌. மாவோயிசுட்டுக‌ளிம் தாங்க‌ள் கொல்வ‌தை நிறுத்த‌ போவ‌தில்லை.

இங்கே ஆசாதின் ம‌ர‌ண‌த்தை ஏன் நாம் இந்த‌ வ‌ன்முறை பிர‌ச்ச‌னையிலிருந்து வில‌க்கி பார்க்க‌வேண்டி இருக்கின்ற‌து என்றால் ஆசாத் தான் (மாவோயிசுட்டு)க‌ட்சிக்கு அக்னிவினேசு மூல‌மாக‌ ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌டித‌ங்க‌ளை எடுத்துச் செல்ப‌வ‌ரும், ந‌ம்ப‌த‌குந்த‌வ‌ருமாவார். ஆசாத் க‌ட்சிக்குள்ளே அமைதி பேச்சுவார்த்தையின் மேல் ஒரு ந‌ம்பிக்கையை கொண்டு வ‌ர‌ முய‌ற்சித்த‌வ‌ர். மேலும் க‌ட்சிக்குள்ளே ந‌ல்ல‌ ம‌ரியாதை உள்ள‌வ‌ருமாவார். ஆனால் அவ‌ரை கொன்ற‌த‌ன் மூல‌ம் அர‌சு தான் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு வ‌ர‌ப்போவ‌தே இல்லை என்று தெளிவாக‌ அறிவித்து விட்ட‌து” என்கிறார் மாவோயிசுட்டுக‌ளின் த‌ண்ட‌கார‌ண்ய‌ ப‌குதியின் செய்தி தொட‌ர்பாள‌ர் உசென்டி.

முதல் இர‌ண்டு க‌டித‌ங்க‌ளும் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் ம‌க்க‌ளை சென்ற‌டைந்து விட்ட‌ன‌. ஆனால் மூன்றாவ‌து க‌டித‌ம் இன்னும் இர‌க‌சிய‌மாக‌வே உள்ள‌து. ஆனால் இந்த‌ மூன்றாவ‌து க‌டித்தை ப‌டித்த‌ சில‌ர் இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளும் அமைதி பேச்சுவார்த்தை மிக‌ அருகில் வ‌ந்திருந்த‌தாக‌வும், அதுவே ஆசாத் கொலை செய்ய‌ப்ப‌ட்ட‌த‌ன் கார‌ண‌மாக‌வும் மாறிவிட்ட‌து. இதில் இர‌ண்டு த‌ர‌ப்புக‌ளுக்கும் இடையே உள்ள‌ ஆதிவாசிக‌ளின் நிலை தான் மிக‌வும் மோச‌மான‌து. இந்த‌(ஆசாதின்) கொலைக்கு மாவோயிசுட்டுக‌ள் க‌ண்டிப்பாக‌ ப‌ழிவாங்குவார்க‌ள்.

2004ல் ஆந்திராவில் அர‌சுக்கும் மாவோயிசுட்டுக‌ளுக்கும் இடையே ந‌டுநிலையாள‌ராக‌ செய‌ல்ப‌ட்ட‌ ஹ‌ர‌கோபால் கூறுகையில் “இந்த பாசிச‌ அர‌சு ம‌க்க‌ளை கொல்வ‌த‌ன் மூல‌ம் அமைதி திரும்பி விடும் என்று எண்ணுகிற‌து”. இது போன்ற‌ நிக‌ழ்வுக‌ள்(ஆசாதின் கொலை) இந்த‌ அரசின் நிலையற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன‌‌. ஆந்திராவின் காட்டு ப‌குதியில் துப்பாக்கி ச‌ண்டையில் ஆசாத் கொல்ல‌ப்ப‌ட்ட‌து அர‌சை பொறுத்த‌ வ்ரை ஒரு சாத‌னை. ஆசாத் மாவோயிசுட்டுக‌ளில் மூன்றாம் இட‌த்தில் இருப்ப‌வ‌ர். க‌ட்சியின் மைய‌க் குழு உறுப்பின‌ர். மேலும் மாவோயிசுட்டுக‌ளின் த‌லைவ‌ர். க‌ண‌ப‌திக்கு ப‌க்க‌ ப‌ல‌மாக‌ இருந்த‌வ‌ர்.

ஆசாத் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்ட‌தில் பிற‌ந்த‌வ‌ர். அவ‌ர‌து த‌ந்தை ஒரு உண‌வ‌க‌ முத‌லாளி. ஆசாத்திற்கு த‌ற்போது வ‌ய‌து 55. வாராங்க‌லில் உள்ள‌ ம‌ண்ட‌ல‌ பொறியிய‌ல் க‌ல்லூரியில் ப‌டித்த‌வ‌ர். இர‌ண்டு முதுநி‌லை பொறியிய‌ல்(M.tech) ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர். புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர் யூனிய‌னை துவ‌க்கிய‌வ‌ர். எம‌ர்ஜென்சி கால‌க‌ட்ட‌த்தில் சிறையில் அடைக்க‌ப்ப‌ட்டார். அத‌ன் பின்ன‌ர் இவ‌ர் த‌லைம‌றைவு வாழ்க்கை வாழ‌ ஆர‌ம்பித்தார்.

“இந்தியாவின் அமைதி பேச்சு வார்த்தையின் கோர‌முக‌ம் இவ்வாறு இருக்கின்ற‌து. இதைவிட‌ இன்னொரு கொடுமை என்ன‌வென்றால் இந்திய‌ பிர‌த‌ம‌ரே ஒப்புக்கொண்ட‌ ஆதிவாசிக‌ளின் தற்போதைய நிலை ப‌ற்றியும், அதை மேம்படுத்துவது தொடர்பாகவும் ப‌ஞ்சாய‌த் இராஜ் அமைச்ச‌க‌த்தால் ச‌ம‌ர்ப்பிக்க‌ப்ப‌ட்ட ஆய்வ‌றிக்கை இதே அர‌சால் குப்பை தொட்டியில் போட‌ப்ப‌ட்டுள்ள‌து. இதை ப‌ற்றிய‌ மொழிபெய‌ர்ப்பை விரைவில் நீங்க‌ள் எதிர்பார்க்க‌லாம்”

நன்றி: வினவு

No comments: