Jun 17, 2010

இந்தியாவில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும்: ஹிந்து தீவிரவாதி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் வேண்டுகோள்.


திருப்பதி: இந்தியாவில் மத மாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறியுள்ளார். திருப்பதியில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் 75வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கிய அவர் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

நம் நாட்டில் கிறிஸ்தவர்கள் சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு மத மாற்றத்தில் ஈடுபடுகிறார்கள். இதற்கு தடை விதிக்க வேண்டும்.மத மாற்றத்தை ஆட்சியில் இருப்பவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்து மத தர்மத்தை காக்க பாபா ராம்தேவ் கட்சி தொடங்குகிறார். இந்து துறவிகள் அனைவரும் அவரை ஆதரிக்க வேண்டும். தற்போது ஏராளமான தூறவிகள் அவரை ஆதரிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

காஞ்சி மடம் சார்பில் திருப்பதியில் மிக பிரமாண்டமான மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.500 கோடி வரை செலவிடப்படும். இந்த மருத்துவ கல்லூரியில் அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை ஒன்று கட்டப்படும்.நம் மக்களிடம் தற்போது கடவுள் பக்தி அதிகரித்துள்ளது, ஆனால், மனிதாபிமானம் குறைந்து விட்டது என்றார்.

No comments: