Dec 9, 2009

நரசிம்மராவ் ஆசியோடுதான் பாபர் மசூதியை இடித்தோம்: ஹிந்து தீவிரவாதி வேதாந்தி சாமியார்


‘‘நரசிம்மராவ் ஆசியோடுதான் பாபர் மசூதியை இடித்தோம் என்று ஹிந்து தீவிரவாதி வேதாந்தி சாமியார் கூறினார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் ஆணையம், 17 ஆண்டுகளுக்குப் பிறது தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில் வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 60 ஹிந்து தீவிரவாதிகள் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது.

இதில் முன்னாள் தீவிரவாத பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும், ராமஜென்ம பூமி கமிட்டி உறுப்பின-ருமான தீவிரவாதி ராம்விலாஸ் வேதாந்தி சாமியாரும் ஒருவர். லிபரான் அறிக்கையில் முன் கூட்டியே திட்ட மிட்டு பாபர் மசூதியை இடித்தார்கள் என்று குறிப்பிடப்-பட்டுள்ளது. இதை தீவிரவாத பா.ஜ.க. தலைவர்கள் மறுத்து வருகின்றனர்.

ஆனால் தீவிரவாதி வேதாந்தி சாமியார் மட்டும் திட்ட-மிட்டுதான் பாபர் மசூதியை இடித்தோம் என்று ஒப்புதல் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம்தேதி நடக்கும் கரசேவையின்போது பாபர் மசூதியை இடித்துத் தள்ள வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்திருந்தோம். அப்போது பிரதமராக இருந்த தீவிரவாதி நரசிம்மராவை, 1992 நவம்பர் மாதம் 30 ஆம் தேதி, நான் சந்தித்தேன்.

அப்போது அவர் கரசேவையின்போது என்ன செய்யப்போகிறீர்கள்? என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 6 ஆம் தேதி பாபர் மசூதியை இடித்துத் தள்ளுவோம் என்று கூறினேன்.

இடிக்கப்போகிறோம் என்று அவரிடம் சொல்லிவிட்டுத்தான் இடித்தோம். எனவே அவருடைய ஆசீர்வாதத்தோடுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.6 ஆம் தேதி தீவிரவாத கரசேவகர்கள் பாபர் மசூதி பகுதிக்குள் நுழைந்து மசூதியின் ‘டூம்’ மீது ஏறினார்கள். அப்போது சங் பரிவாரைச் சேர்ந்த சில தலைவர்கள் அவர்களை இறங்கி வரும்படி கேட்டனர். ஆனால் நான் அவர்களை மேலும் முன்னேறிச் செல்லுங்கள், இடித்துத் தள்ளுங்கள் என்று கூறினேன். அதன்படி இடிக்கப்பட்டது.

பாபர் மசூதியை இடித்து அதைத் தரை மட்டமாகச் சமப்படுத்தும் வரை அதாவது 7 ஆம் தேதி இரவு வரை அங்கேதான் நான் இருந்தேன். மசூதியை இடிப்பதை முழுவதும் நான் மேற்பார்வை-யிட்டேன். இதைச் சொல்வதற்ககாக நான் கவலைப்பட வில்லை. முடிந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள்.

இவ்வாறு தீவிரவாதி வேதாந்தி சாமியார் கூறினார்.

No comments: