Aug 6, 2015

சூரியனுக்கு காப்புரிமையா?

ரஜனிகாந்த், கமலஹாசன், விஜய் என்று கூத்தாடிகளின் பின்னாள் சுற்றும் எனதருமை தமிழ் சமூகமே.  இவர் யாரென்று உங்களுக்கு தெரிகிறதா? இவர்கள் நீங்கள் பார்த்த போலிகள் இல்லை போலியோவுக்கு மருந்து கண்டுபிடித்து அதை மக்களுக்கு இலவசமாக கிடைக்க செய்த மாமேதை. 
டாஸ்மார் கடைகளை திறந்து மக்களை குடிபோதையில் ஆழ்த்தி அவர்களின் சிந்தனை திறனை பறித்து மக்களை மடையர்கள் ஆக்கி ஆட்சி செய்த கருணாநிதி முதல் ஜெயலலிதா வரை உள்ள ஆட்சியாளர்களே, ஊழல் அரசியல்வாதிகளே, உயிர்காக்கும் மருத்துவ துறையே, தரம் குறைந்த மருந்துக்களை தாயாரித்து விற்கும் மருந்து கம்பெனிகளே, இவரிடம் இருந்து மனசாட்சியை கற்றுக்கொள்ளுங்கள்.
இவர்தான் Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். போலியோ தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய்பட்டு இறந்திருப்பார்கள்! 
பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உங்கள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், 

No comments: