Apr 30, 2015

விண்வெளி பற்றி ஒரு துளி!

பால்வெளி (galaxy) யில் மனிதர்கள் வாழும் பூமி சூரிய குடும்பத்தை சேர்ந்ததாகும். ஆரம்ப காலத்தில் விண்வெளி ஆராட்சியாளர்களால் சூரிய குடும்பம் ஒன்றே பால்வெளி மண்டலத்தில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது.  

பின்னர், சூரிய குடும்பம் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான கோள்களின் குடும்பங்கள் இருப்பதாக ஆராட்சியாளர்கள் கண்டுபிடித்தனர். மிக தொலைவில் உள்ள அவைகளை சென்றடைய முடியுமா? என்கிற ஆராய்ச்சி தொடர்கிறது. ஆரம்ப காலத்தில் புளூடோ என்கிற கோள் சூரிய குடும்பத்தை சேர்ந்ததாக கணக்கிடப்பட்டது. அதனாலேயே நவகிரகங்கள் என்று சொல்வார்கள். பின்னர் அது பெரும் கோள் அல்ல என்று கருதப்பட்டு சிறு கோள்களுடன் சேர்க்கப்பட்டது. 
சூரியக் குடும்பம் (Solar System);  சூரியகுடும்பம் என்பது சூரியனையும்  சூரியனின் ஈர்ப்பு விசையில் சுற்றும் கோள்கள், சிறுகோள்கள், துணை கோள்கள் போன்றவற்றை  உள்ளடக்கிய ஒரு தொகுதி ஆகும். புதன் வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரோனஸ், நெப்டியூன் ஆகிய எட்டு கோள்கள் சூரிய குடும்பத்தை சேர்ந்த கோள்கள் ஆகும்.

சிறுகோள்கள் அல்லது குறுங்கோள்கள்:  செரசு, புளூடோ, எரிஸ், ஹௌமியா, மேக் மேக், செட்னா ஆகியவைகள் ஆகும். 

துணைக் கோள்:  நீலா ஆகும்.

போற்றப்படும் அறிவியல் அறிஞ்சர்கள்;   நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், கலீலியோ கலிலியோகான்னசு கெப்லர்,  ஐசக் நியூட்டன்,  ஆகியோர்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஆவர். 

No comments: