Sep 14, 2013

தமிழக மீனவ அமைப்புகளின் இந்தியா குறித்த அறியாமை!

செப் 15/2013: தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம் மற்று தென்னிந்திய மீனவர் பேரவை, பாரம்பரிய மீனவர் சங்கம் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் தமிழக மீனவர்கள் சார்பாக பல கோரிக்கைகளை எழுப்பி உள்ளனர். 

அதில், இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரால்  படுகொலை செய்யப் படுகின்றனர். மத்திய  அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கை ராணுவத்தினரிடம் இருந்து எங்களை பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்யவேண்டும் இல்லை என்றால் எங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து தற்காத்து கொள்ள லைசென்சுடன் ஆயுதமும் வழங்க வேண்டும் என்று கோருகிறோம்’’ என்று தெரிவித்தனர்.

மேலும்’தமிழகத்தில் நெல்லை,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல ஆண்டு களாக தாது மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆண்டுக்கு பல லட்சம் கோடி இழப்பு அரசுக்கு ஏற்படுகிறது.  

அதுமட்டுமல்லாமல் இந்த பகுதிகளீல் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.   எனவே, தாது மணல் அள்ளும் முதலாளிகளை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், இதை விசாரிக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பினர்.

சிந்தக்கவும்: இவர்களது அறியாமையை என்னவென்று சொல்வது. மத்திய அரசுதான்  சிங்கள ராணுவத்திற்கு தமிழகத்தில் வைத்து பயிற்சி அளிக்கிறது. இந்திய அரசின் ஆசிர்வாதத்துடன் தான் எல்லாம் நடக்கிறது. அப்படி இருக்கையில் அவர்களிடமே போயி எங்களை பாதுகாக்கத்து கொள்ள பயிற்ச்சியும் ஆயுதமும் வழங்குங்கள் என்று கேட்க்கும் இந்த மீனவ அமைப்புகளின் அறியாமையை என்னவென்று சொல்வது.

மீனவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தாங்களே ஆயுதம் ஏந்த வேண்டியதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி. இதற்க்கு இவர்கள் தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உதவி செய்திடல் வேண்டும். இல்லையேல் தமிழினத்தை கூடிய சீக்கிரம் வட இந்தியர்கள் அழிப்பர் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியா நமது அண்டை நாடு, சிங்கள இனத்தின் சொந்தங்களின் நாடு என்பதை தமிழ்க மீனவ அமைப்புகள் புரியாதது அறியாமையின் உச்சம்>

4 comments:

Anonymous said...

மீனவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தாங்களே ஆயுதம் ஏந்த வேண்டியதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி.THIS IS WRONG.THIS COULD LEAD CIVIL WAR IN INDIA.

Anonymous said...

This is bullshit. Weapons only make pain. Don't play with Tamil Fisherman's life. Indian Govt. should take a action.

சேக்காளி said...

//இந்தியா நமது அண்டை நாடு, சிங்கள இனத்தின் சொந்தங்களின் நாடு//

Anonymous said...

மீனவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தாங்களே ஆயுதம் ஏந்த வேண்டியதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி.....