Dec 31, 2011

அரசியல் கோமாளிகள்!

1) தானே’ புயலின் கோரத்தாண்டவத்தில் 30க்கும்
அதிகமானோர் பலியாயினர். 20 ஆயிரம் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்தன. அரசு இரண்டு இலட்சம் உதவி.

* அரசு இதை குறைந்தது ஐந்து இலட்சமாக அறிவிக்க வேண்டும். என்ன பிச்சையா போடுறீங்கள்! அரசு கஜானாக்கள் இதுபோன்ற இயற்க்கை அனத்தங்களுக்கு துறக்கட்டும் இலவசங்களுக்கு அல்ல.

2) நேர்மையான, திறமையான நிர்வாகத்தை அளிக்க பாடுபடுவேன்: பிரதமர் மன்மோகன்  புத்தாண்டு செய்தி!

* பொருளாதார மேதையான இவரை விட லல்லு பிரசாத் எவ்வளவோ தேவலை அவரு  நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த இந்திய ரயில்வேயை லாபகரமாக மாற்றினார்.  அனால் இந்த பொருளாதார புலி  பிரதமார இருந்தும் நாடு படுகுழிக்குள் போகிறது.

3) நட்சத்திர ஓட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாடப்படுவதை எதிர்த்து அந்த ஓட்டலை முற்றுகையிட முயன்ற பா.ஜ.,வினர் 50 பேர் கைது.

* மக்களை பாதிக்கும் எத்தனயோ பிரச்சனைகள் இருக்க இவர்கள் புத்தாண்டு கொண்டாடத்திற்கு போராட்டம் நடத்து கின்றனர். மக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு போராட்டம் செய்யாது ஹிந்துத்துவா சித்தாந்தங்களை பாதுக்காக்க போராட்டம் நல்லா இருக்கு.

4) "துரோக கும்பலுக்கு மன்னிப்பே கிடையாது,'' என, அ.தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் ஜெயலலிதா சூளுரை.

* ஆமாம் இவரை முதல்வர் ஆக்கியதற்கு நல்லா குடும்ப சண்டை குடுமி சண்டை போடுகிறார்.

5) தமிழர்கள் தாக்கப்பட்டது உண்மை, உம்மன்சாண்டிக்கு கலைஞர் பதில் கடிதம்.
 

* ஓய்ந்து கிடந்த கருணாநிதி அறிக்கை போரை நடத்த ஆரம்பிச்சிட்டார். முல்லை பெரியாரை வைத்து அடுத்த தேர்தல் வரை காலம் ஓடும்.

6) அமெரிக்க இந்தியரும் நோபல் பரிசு பெற்ற வருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் அரசு "நைட்ஹூட்' விருது அறிவித்துள்ளது.

* இவருக்கு நோபல் பரிசு கிடைத்ததற்கு வாழ்த்து சொல்லினர் நமது இந்திய தேசபக்தி அடிமைகள். எனக்கு வாழ்த்து சொல்லி என்னை தொந்தரவு படுத்த வேண்டாம் என்று சொன்ன ஆணவம் பிடித்தவர் இவர்.

7) புத்தாண்டு கொண்டாட்டத்தில் விஷ சாராயம் குடித்த எட்டு கிராம மக்கள் பலியானார்கள்.

* முதலில் கள்ள சாராயம் காய்ச்சும் கயவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.  இலவசங்களை அறிவிக்க அரசியல் பொறுக்கிகள் டாஸ்மார்க் நடத்துகிறார்கள். முழுமையான மதுவிலக்கு அமுல்படுத்தப்பட வேண்டும்.

2 comments:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

சிறு.சிறு வரிகளில் "நறுக்" செய்திகள்.இன்றைய சூழலில் பயன்தரத்தக்க கட்டுரை இது...பதிவு நல்லா இருந்தது....முயற்சி தொடரட்டும்,உண்மையை சொல்லும் வித்தியாசமான கட்டுரை,உங்க தளத்திற்கு நாங்க வந்தோம்ல,எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...join as a member

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

புனிதப்போராளி said...

ஏ௧ இறைவன் காக்கட்டும் ...ஏழைகளின் கண்ணீர்த்துளிகள் இன்னும் காய்ந்தபாடில்லை நாட்டை ஆழும் ஆதிக்க வர்க்கத்தினர் ஏழைகளை கண்டுகொள்ளமறுக்கின்றார்கள்,,,,இலவசங்களை அள்ளிவிசும் முதல்வர்கள்..நமது கையை கொண்டு நம் கண்ணில் அல்லவா குத்துகின்றனர் உணர்வார்களா தமிழகமக்கள்[ திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது மக்களாய் பார்த்து விழிக்கா விட்டால் நம்மை நாம்காக்க முடியாது