Jul 11, 2011

தமிழர்களுக்கு 2 நாடு ஒன்று தமிழ்நாடு, இன்னொன்று ஈழ நாடு!

JULY 12, நாம் தமிழர் கட்சி சார்பில் கோலார் தங்கவயலில்  இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.  கர்நாடக தமிழர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து பயில வேண்டும். உலகில் தமிழனை போல் மனிதநேயம் மிக்கவன் ஒருவனும் இல்லை.

தமிழீழம் தமிழ் மக்களின் பூமி. அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தமிழர்களுக்கு 2 நாடு உள்ளது. ஒன்று தமிழ்நாடு, இன்னொன்று ஈழ நாடு. இலங்கையை ஆண்டவன் ராவணன். அவன் தமிழன். ஆனால், அங்கு ஈழம் அமைக்க முடியாத நிலை தற்போது உள்ளது. சினிமாவில் கற்பழிப்பு காட்சிகள் வரும்போது, அதிலிருந்து பெண்ணை காப்பாற்ற வருபவன் கதாநாயகன் என்று சித்தரிக்கிறார்கள்.

ஆனால் இலங்கையில் தமிழ் பெண்களை இலங்கை ராணுவம் சூறையாடியபோது, அதை எதிர்த்து நின்று போராடியவர் பிரபாகரன். அவரை பயங்கரவாதி என்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக் கொள்வது? தற்போது இலங்கையில் அமைதி நிலவுவதாக கூறுகிறார்கள். அங்கு தமிழர்கள் 2 கைகளை உயர்த்தி உள்ளனர். ஒன்று அறிவு போராட்டக் கை. இன்னொன்று, ஆயுத போராட்டக் கை. இதில் எது வேண்டுமென்று ஈழத்தை எதிர்ப்பவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும். ஈழம் நிச்சயம் மலர்ந்தே தீரும். அது நடப்பது உறுதி.

இலங்கையில் இறுதிகட்ட போரில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை கொன்று குவித்த அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக பலமான ஆதாரங்கள் உள்ளன. பல்வேறு நாடுகளில் இனப்படுகொலை நடைபெற்று உள்ளது. அதற்கு காரணமாக இருந்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் ராஜபக்சேவுக்கும் தண்டனை வழங்கியே ஆக வேண்டும் என்றார்.

No comments: