Apr 7, 2011

பாரதிய ஜனதாவை ஆதரித்து ஹேமமாலினி பிரச்சாரம்!!


நடிகை ஹேமமாலினி சென்னையில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்களான விருகம்பாக்கம் டால்பின் ஸ்ரீதர், துறைமுகம் ஜெய்சங்கர் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

மத்தியில் 5 ஆண்டுகள் பாரதீய ஜனதா ஆட்சி நடந்தபோது நாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை வாஜ்பாய் நிறை வேற்றினார்.

பொருளாதாரத்தில் நாடு முன்னேறியது. இந்தியாவுக்கு உலக அளவில் கவுரவம் கிடைத்தது. மிகச்சிறந்த நிர்வாகத்தை பா.ஜனதா வழங்கியது.

பாரதீய ஜனதாவால் மட்டுமே ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை தர முடியும். எனவே, பா.ஜனதா வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்கள்’’ என்று பேசினார்.

மாலை மைலாப்பூர் தொகுதியில் வானதி சீனிவாசன், வேளச்சேரி தொகுதியில் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

சிந்திக்கவும்: இவர்கள் ஆட்சியில்தான் 2ஜி ஊழல் விவகாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கார்கில் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு சவபெட்டி வாங்கியதில் ஊழல் செய்த கேடு கெட்டவர்கள் இவர்கள். இவர்கள் ஊழலை பற்றி பேசுகிறார்கள்.

ஒரு கவர்ச்சி நடிகை, கனவு கன்னியை வைத்து பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்க நினைக்கும் கீழ்த்தரமானவர்கள். இவர்கள் இந்தியாவை தலைகீழாக மாற்ற போகிறார்களாம்.

No comments: