Feb 21, 2011

அஸ்தமிக்கும் ரஜினியின் அரசியல் வாழ்க்கை!!

பிப் 22: ரஜினி அரசியலுக்கு வரவேண்டும், கட்சி துவங்க வேண்டும் என அவரது ரசிகர்களும், நலம் விரும்பிகளும் தொடர்ந்து பல காலகட்டங்களில் வலியுறுத்தி வந்தனர். எனினும் தான் நேரடி அரசியலில் ஈடுபடுவதற்கான சூழ்நிலை தற்போது தமிழகத்தில் இல்லை என்றும், இது குறித்து தான் பரிசீலித்து வருவதாகவும், "ஆண்டவன் நினைத்தால் நாளையே கட்சி" என்றும் ரஜினி பல கட்டங்களில் கூறிவந்தார்.

மூப்பனார் இருக்கும் போது இவர் ஜெயலலிதாவை எதிர்த்து அறிக்கைகள் பல கொடுத்தார். திமுக, மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவும் தெரிவித்தார். மூப்பனார் மற்றும் பலரும் இவரை அரசியலுக்கு கொண்டுவர முயற்ச்சித்தனர் ஆனால் முடியவில்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதாவது காரணத்தை சொல்லி அரசியலுக்கு வருவதில் தயக்கம் காட்டி வந்தார். இதை தயக்கம் என்பதை விட பயம் என்று சொல்வதே சாலச்சிறந்தது.

இவர் நினைத்து கொண்டார் எந்த உழைப்பும் செய்யாமல் நேரடியாக அரசியலுக்கு வந்துவிடலாம் என்று. அதாவது மக்கள் பிரச்சனைகளை எதையும் பேசாமல், சினிமா துறையில் பெரிய நடிகர் என்ற புகழ் ஒன்று மட்டும் போதும் நாம் அரசியலுக்கு வந்துவிடலாம் என்று எண்ணி கொண்டிருக்கிறார். தினம், தினம் எத்தனையோ மக்கள் பிரச்சனைகள், சமீப காலமாக மீனவர்கள் பிரச்சனை இவர் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார். இவர் நினைக்கிறார் போலும் தமிழக மக்கள் இவரை நேரடியாக முதலமைச்சர் சீட்டில் உட்கார வைப்பார்கள் என்று. எப்படி ஈசியாக நடிப்பின் மூலம் கோடி கணக்கில் பணம் வந்ததோ அதுபோல் ஈசியாக முதலமைச்சர் சீட்டும் கிடைக்கும் உட்காரலாம் என்று பார்கிறார்போல.

இவர் ஒன்றும் அப்படி ஈசியாக அரசியலில் நேரிடையாக நுழைந்து விடமுடியாது. அது ஒரு காலம் எம்.ஜி.ஆர். அரசியலில் வந்து வெற்றி பெற்றது. இப்பொது மக்கள் தெளிவாக இருகிறார்கள். நடிகர்கள் கேமிரா முன்னால் நடித்த நடிப்பு என்பது வேறு அரசியல் பொது வாழ்க்கை என்பது வேறு. சிறந்த நடிகர் என்ற ஒரு தகுதியை வைத்து மட்டும் அரசியலில் நுழைந்து விட முடியாது. இப்பொது உள்ள மக்கள் கல்வி கற்றவர், சிந்திக்க தெரிந்தவர்கள். நடிப்பு வேறு, சமூக, அரசியல் செயல்பாடுகள் என்பது வேறு என்பதை தெளிவாக உணர்ந்தவர்கள்.

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றால்? இவர் தொடர்ந்து மக்கள் தொண்டராக இருந்து மக்களின் அன்றாட பிரச்சனைகளை பற்றி பேச வேண்டும், அதை தீர்க்க தனது ரசிகர் மன்றங்கள் மூலம் போராட வேண்டும். அதை விட்டு விட்டு ரசிகர் மன்றங்கள் என்பதை வைத்து சம்பாதித்த கோடிகளுக்கு கணக்கு காட்ட பணக்கார்கள் நடத்தும் ட்ரஸ்ட் போல் நடத்தி எந்த பிரோஜனமும் இல்லை. இவர் மக்களுக்காக சிலவருடங்கள் உண்மையிலே தொண்டு செய்து விட்டு அரசியலுக்கு வந்தால் மக்கள் நல்மதிப்பை பெற முடியும். அப்போது தான் அவரது அரசியல் வாழ்க்கை ஒளிர முடியும். அப்படி இல்லை என்றால் ரஜினியின் அரசியல் வாழ்க்கை என்பது வெறும் கனவுதான் என்றே என்ன தோன்றுகிறது. அப்படியே இவர் அரசியலுக்கு வந்தாலும் நான்காம் பெயரோடு ஐந்தாம் பெயராக ஒதுக்கி தள்ளப்படுவார். கடைசியில் ஐந்து சீட்டுக்கும் பத்து சீட்டுக்கும் இங்கும் அங்கும் அலையை வேண்டியது தான். நடிகர்கள் அரசியலுக்கு வரட்டும்! ஆனால் நடிப்பு ஒன்று மட்டுமே அவர்களது தகுதி என்றால் அதுதான் இல்லை. முதலில் மக்கள் தொண்டு செய்யட்டும் பின்னால் அரசியலுக்கு வரட்டும். எல்லாரும் ஆதரிக்கலாம்.

சிந்திக்கவும்; அன்புடன் ஆசிரியர் புதியதென்றல்.

No comments: