Sep 26, 2010

நஜாதின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்: அதிபர் ஒபாமா.


வாஷிங்டன்,செப்.26: செப்.11 தாக்குதலைக் குறித்த ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதின் உரை வெறுப்பையும், அவமதிப்பையும் தோற்றுவிப்பது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.பி.பி.சியின் பாரசீக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் அவர். செப்.11 தாக்குதல் அமெரிக்காவின் உருவாக்கம் என்பதனை அமெரிக்காவிலேயே பெரும்பாலானோர் கருதுவதாக வியாழக்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரை நிகழ்த்தியிருந்தார் நஜாத்.
செப்.11 தாக்குதலில் கொல்லப்பட்டோர்களில் பெரும்பாலோர் நியூயார்க்கைச் சார்ந்தவர்களாகயிருக்கும் சூழலில் அங்கு வைத்தே இத்தகையதொரு உரையை நிகழ்த்தியது பொறுக்க முடியாதது என ஒபாமா கூறினார்.

No comments: