Aug 14, 2010

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பு.

கோழிக்கோடு,ஆக,14:சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டுதோறும் நடத்திவரும் சுதந்திர தின அணிவகுப்பு திருவனந்தபுரம், பத்தணம்திட்டா, திருச்சூர், வயநாடு ஆகிய மாவட்டங்களில் நடத்துவதற்கு கேரள மாநில பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயற்குழு தீர்மானித்துள்ளது.ஒன்பது மாவட்டங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த அம்மாவட்டங்களின் ஆட்சியர்கள் தடை ஏற்படுத்திய சூழலில்தான் தடை ஏற்படுத்தாத மாவட்டங்களில் அணிவகுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நாஸருத்தீன் எழமரம் தலைமை வகித்தார். சட்டம் ஒழுங்கைச் சுட்டிக்காட்டி ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரளாவில் 9 மாவட்டங்களில் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
கர்நாடகாவில் மைசூர், உடுப்பி ஆகிய இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நேற்று முன் தினம் கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.தமிழ் நாட்டில் மேட்டுபாளயத்தில் வைத்து நடக்க இருக்கிறது.இந்த அணிவகுப்புகளை நடத்தவிட மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் கொக்கரித்துள்ளனர். ஆர்.எஸ்.எஸ். பாசிச பயங்கரவாதிகளுக்கு இது ஒரு அச்சம் வூட்டும் அணிவகுப்புதான் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments: