Jan 24, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆதரவு.


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவியான சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் ஊழல் மோசடிகளால் கவலையடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனை மாற்றியமைப்பதற்காக தனது ஆதரவாளர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக 11 வருடகாலம் ஆட்சி செய்த சந்திரிகாவின் பகிரங்கமான இந்த அறிவிப்பு சரத் பொன்சேகாவுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கிய சந்திரிகாவின் தந்தையும், சந்திரிகாவின் தயாராரும் இலங்கையின் பிரதமர்களாக ஆட்சி நடத்தியவர்கள்.

இந்த பின்னணியில் சந்திரிகாவின் குடும்பத்துக்கு இலங்கையி்ல் பெரும் அரசியல் செல்வாக்கு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.