Apr 5, 2012

தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாக!

தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாக: * மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.

* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.

* அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.

* அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.

* படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.

* பேரிச்சம் பழத்தோடு பாதம், பிஸ்தா, அக்ரோட்டு ஆகியவைகளை தூய பசும்பாலோடு மிக்ஸியில் அரைத்து தேன் விட்டு சாப்பிடவும் தாம்பத்தியத்தில் நாட்டம் உண்டாகும்.   

தாது விருந்தி:

* முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.

* நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.

* கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

* அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.

* வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.

6 comments:

Anonymous said...

WONDERFUL

Anonymous said...

,,

தமிழ் மாறன் said...

Nalla maruthrhuva kurippugalthaan .... Nanri

Seeni said...

nalla thakaval!

yaar intha pakkuvam senju tharuvaanga....

ராம்ஜி_யாஹூ said...

படுக்கப் போவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு கணினி , பதிவுகள் படித்தல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்

Anonymous said...

//அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.// ஐயா, இந்த அமுக்கராங் கிழங்கு என்றால் என்ன? அது எங்கு கிடைக்கும்? யாராவது சொல்லுங்களேன்.