Mar 10, 2011

பாயும் புலி!!

தமிழகத்தில் இருந்து காங்கிரசை ஒழித்து கட்ட ஒரு துணிச்சலான படை அணி வேலை செய்கிறது. சீமானை விட வீறுகொண்டு பேசும் ஏராளமான இளம் பேச்சாளர்கள் காங்கிரசுக்கு எதிராக அணிவகுத்து நிற்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பங்களிப்பை அவ்வளவு குறைவாக மதிப்பிட்டுவிட முடியாது. தமிழ்ர்களுக்கு எதிராக வாய் சவடால் விட்ட இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம் உட்பட காங்கிரசு தலைவர்களை தோற்கடித்து சாதனை படைத்தனர்.

ஈழத்தமிழர்களின் 63 ஆண்டு கனவு நினைவாகும் தருணத்தில் அதை களைத்த பாவிகள் இவர்கள். தனிஈழம் நாட்டுக்கு சர்வதேச அரசியல் அங்கீகாரம் கிடைக்ககூடிய நேரத்தில் தமிழர் போராட்டத்தை ஒழிக்க சிங்கள பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கொடுத்து உதவினர். தமிழர் போராட்டத்தை அழிக்க காரணமாக இருந்தனர். பல் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த காங்கிரசு 63 தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவியது என்ற செய்தியை ஆவோளோடு கேட்க்க உலகின் பல மூலையிலும் இருக்கும் தமிழனும் ஏங்கிக் கிடக்கிறான்.

2 comments:

Ash said...

மத்திய மாநில அரசுகள் அடித்த கூத்துக்களையும் கொட்டங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் இன்னிங்ஸ் முடிந்தது. இனி மக்களின் இன்னிங்ஸ் ஆரம்பம். அவர்களின் 234 விக்கெட்டுக்களையும் மக்கள் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறார்கள்.அதற்கு முக்கிய காரணங்களாக ஸ்பெக்ட்ரம், ஈழத் தமிழர்களின் இன அழிப்புக்கு துணை போனது ஆகியவை இருக்கும்.

Ash said...

மத்திய மாநில அரசுகள் அடித்த கூத்துக்களையும் கொட்டங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் இன்னிங்ஸ் முடிந்தது. இனி மக்களின் இன்னிங்ஸ் ஆரம்பம். அவர்களின் 234 விக்கெட்டுக்களையும் மக்கள் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப் போகிறார்கள்.அதற்கு முக்கிய காரணங்களாக ஸ்பெக்ட்ரம், ஈழத் தமிழர்களின் இன அழிப்புக்கு துணை போனது ஆகியவை இருக்கும்.