Jan 20, 2011

துக்ளக் பத்திரிகை இனி சமஸ்கிருதத்தில் நடத்தப்படுமா?? ஒரு கேள்வி???

துக்ளக் ஆண்டு விழாவில் திருவாளர் சோ ராமசாமி மீண்டும் தனது அழுத்தமான பார்ப்பனர் அடையாளத்தை காட்டிக் கொண்டுவிட்டார். "கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டினால் என்ன பயன்? அந்த மாநாட்டில் கலைஞரை எல்லோரும் புகழ்வார்கள் தமிழ் வளர்ச்சிக்கு அங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. ஆங்கில மொழி இப்படி மாநாடு நடத்தியதாலா வளர்ந்தது? என்று துக்ளக் ஆசிரியர் சோ அவருக்கே உரிய வயிற்றெரிச்சலோடு அவரது பத்திரிகையின் 42 வது ஆண்டு விழாவில் பேசியிருக்கிறார்.

அவர் நடத்திய அந்த ஆண்டு விழாவில் பேசியவர்கள் அனைவரும் ‘சோ’ தைரியசாலி
விலைக்கு வாங்க முடியாதவர், என்ற ரீதியில் அவரை வானளாவப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள். அதையெல்லாம் மகிழ்ச்சியோடு ரசித்துக் கேட்டுக் கொண்டுதானிருந்தாரே தவிர - "அய்யோ வேண்டாம்; போதும் புகழ்ந்தது" என்று தடுத்து விடவில்லை அவர்!
இப்படிப்பட்ட புகழுரைகளை பாராட்டு களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே ஆண்டுதோறும் விழா எடுத்து அதிலே பேசுவோர் தனக்கு வழங்கும் பாராட்டுகளை ரசித்துக் கொண்டிருப்பவர்! அப்படிப் பாராட்டுமளவிற்கு இந்த மகானுபவர் என்ன சாதனை நிகழ்த்திக் காட்டி விட்டார்? திராவிடர் இயக்கத்தை நையாண்டி செய்வது,புராண, இதிகாசங்களிலுள்ள
ஹிந்துத்துவா மூடத்தனங்களைப் பரப்புவது,ஊழல் எதிர்ப்பு என்ற பேரால் ஜெயலலிதாவுக்கு தங்க முலாம் பூசுவது போன்ற சமூக விரோத, மக்கள் விரோத, பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் எதிரான கழிசடைக் கருத்துக்களைப் பரப்புவது என்பதைத் தவிர வேறு என்ன சாதித்துவிட்டார்?

சாதி வெறியரான அவர் தனது சுயசாதியினரின் அபிமானத்துக்குரிய சமஸ்கிருதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர். கோயில்களில் குடிகொண்டிருக்கும் சாமி சிலைகளுக்கு சமஸ்கிருதம்தான் தெரியும், தமிழ் புரியாது என்பார். அதேசமயம் தேவாரம் பாடிய மூவரிலிருந்து 63 நாயன்மார்களின் வரலாற்றை வாரா வாரம் எழுதுவார்! அது எல்லாம் தமிழ்ப் பாடல்தானே? இதையெல்லாம் எழுதி எழுதி அல்லையன்ஸ் பிரசுரம் மூலம் காசு சம்பாதித்து வயிறு கழுவும் பக்தி வியாபாரி சோ. தமிழில் அர்ச்சனை செய்தால் அது சாமிக்குப் புரியாது. சாமிக்கு ‘வைபரேஷன்’ தான் முக்கியம். அந்த அதிர்வுகள் சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது என்று வக்கணை பேசுவார். காரணம் என்ன? அவரது சுயசாதியினருக்கே பொதுவான தமிழ் விரோதம் சமஸ்கிருத அபிமானம்தான்! உலகத் தமிழ் மாநாட்டினால் ஒன்றும் பயனில்லை என்கிறார்; அதனால் தமிழ் வளராது என்கிறார்.
‘சோ’வின் சொந்த ஜாதிக்காரராகிய சங்கராச்சாரியார் சமஸ்கிருத வளர்ச்சிக்காக சதஸ்கள் நடத்தினால் அதன் மூலம் சமஸ்கிருதம் வளரும் என்று மட்டும் நம்புகிறாரே எப்படி?

தமிழ்நாட்டு அரசியலை வெறும் அரட்டைக் கச்சேரியாக மாற்றுவதற்காகவே பத்திரிகை நடத்தும் சோ ஆண்டுதோறும் தன்னைப் புகழ மண்டபக் கூட்டங்கள் நடத்தும் சோ கலைஞர் செம்மொழி மாநாடு நடத்துவது தம்மைப் புகழ பாராட்டத்தான் என்கிறாரே அதை என்னவென்று வர்ணிப்பது? சங்கராச்சாரியார் உரைகளை எல்லாம், கட்டுரைகளை எல்லாம் ‘தெய்வத்தின் குரல்’ என்று புகழும் ‘சோ’க்கள் இப்படியெல்லாம் பேசுவது எந்தப் புத்தியினால்? பெரியார் தந்த புத்தியை உபயோகித்துப் பார்த்தால் அது எந்தப் புத்தி என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல பளிச்சென்று விளங்கும்!

தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பவர் நம்ம சோ ராமசாமி அவர்கள். தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தினால் அதுறகும் தி.மு.க. மீது பழி மழை பெய்தால் அதற்கும் தி.மு.க. மீது பழி என்று குறை சொல்லுபவர். இவருக்கு பத்திரிக்கை வேறு இருப்பதால் உடனே கார்ட்டூன் வேறு தீட்டிவிடுவார். கலைஞர் என்றால் காய்ச்சி எடுக்கும் அவரது கார்ட்டூன்கள் ஜெயலலிதாவோ மற்ற இந்துத்வ தலைவர்கள் என்றாலோ வெண்சாமரம் வீசும்.

இந்த துக்ளக் ஆசிரியர் ஒரு இரட்டை நாக்கு ஆசாமி, தமிழீழ போராட்டத்தை கொச்சை படுத்துவது பார்பன ஹிந்துத்துவா மதவெறியை தூக்கிபிடிப்பது, செம்மொழியாம் நம் தாய்த்தமிழையும், தமிழர் தம் பண்பாட்டையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டுவதும் தான் இவரது வேலை. இந்த குள்ளநரி மொட்டைப் பாப்பான் தமிழை நீசபாசை என்று இழிசொல் பேசும் காஞ்சிக் கொலைகார காமகேடி சங்கராச்சாரியின் ஊதுகுழல். இவருக்கு தில்லு இருந்தால் செத்துப்போன ஆரிய மொழியாம் சமஸ்கிருதத்தில் பத்திரிக்கை நடத்த வேண்டியது தானே இந்த தமிழின துரோகி! இவர் போன்ற துரோகிகளின் பருப்பு இங்கே தமிழ்நாட்டில் வேகவே வேகாது. தமிழர்கள் கவரிமாங்களை போன்றவர்கள், மானம் இழப்பின் உயிர் துறப்பர். இந்த பிரமான வந்தேறி பார்பனர்கள் போல் இல்லை காசுக்காக வேண்டி மானத்தை விற்பவர்கள் இல்லை. ஈழ தமிழர் போராட்டத்தை எதிர்க்கும் இந்த சோ, ஜெயலலிதா,சுப்பிரமணிய சுவாமி போன்றவர்களுக்கு தமிழர்கள் நல்ல படம் புகட்டுவார்கள்.

நன்றி: சமூக உறவுகள் சாந்தி மற்றும் பாபு.

4 comments:

Anonymous said...

Acchacho...

Anonymous said...

super nice article.continue

Anonymous said...

maanamulla kalaigarukkaaka, maanamulla oru thamilan yezhuthiyathu pola!

Ivargal, UV. Swaminathaiyar, Avvaiyar pondra brahmanarkalaium thittalaame!

Anonymous said...

Cho udaya moothiratha kudithaal kooda unnai madhiri baadu kku ellam budhi varatdhu. Vaiyatherical pattu kathadey, Un kalaigan vaangina adhi poodhadha...