May 1, 2011

இந்தியா இலங்கையை ஆதரிக்க கூடாது!! திருமாவளவன்!!

May 2, இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோரியும், இலங்கையில் தமிழர்களை கொன்றொழித்தது இனப்படுகொலை என்றும் ஐ.நா. அறிவிக்க வேண்டும்.

சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கைது செய்ய வலியுறுத்தியும், ஐ.நா. அறிக்கை குறித்து விவாதிக்க இந்தியா நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின்போது ராஜபக்சேவின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. அப்போது ராஜபக்சேவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியதாவது.

இலங்கையில் படுகொலை நடந்து முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தாமதமாக அறிக்கை வெளியிட்டாலும், உண்மையான அறிக்கையை வெளியிட்ட ஐ.நா.சபை முடிவை வரவேற்கிறோம். வெறும் போர்க்குற்றம் என்று மட்டும் பார்க்காமல், இனபடுகொலை என்று அறிவிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளைம் அவசரமாக கூட்டி, ஐ.நா. சபை அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும். சினா, ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கையை ஆதரிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இலங்கையை இந்தியாவும் ஆதரிக்கக் கூடாது.

இலங்கை தமிழர்களுக்காக உயிர்நீத்த சிவகாசியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் நினைவாக கூட்டம் நடத்தப்படும் என்றும், ஒரு லட்சம் ரூபாய் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றார்.

No comments: