May 1, 2011

இந்தியாவில் விபச்சாரத் தொழில்!! ஒரு ஆய்வு!!

ஏறக்குறைய எழுபது சதவிகித விபச்சாரத் தொழில் செய்யும் பெண்கள் யாரும் வற்புறுத்தாமலும், யார் மூலமும் விற்கப்படாமலும் தானாகவே முன்வந்து விபசாரத் தொழிலில் சேர்ந்துள்ளனர்.

வறுமையில் வாழும் ஏழைப் பெண்களுக்கு விபசாரத் தொழில் எளிதில் அமையக் கூடிய வாழ்வாதார தொழிலாக உள்ளது என்ற அதிர்சிதரக் கூடிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

சாதரணமான வேலைகலான வீட்டு வேலை மற்றும் இன்ன பிற தொழில்களில் ஈடுபட்ட மூத்த வயதுடையவர்கள் கூட இந்த விபசாரத் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பதும் இந்த அறிக்கையின் தகவலாகும்.

இவை “புனே யுனிவர்சிட்டி”யைச் சேர்ந்த “ரோகினி சஹ்னி” மற்றும் “V கல்யாண ஷங்கர்” ஆகியோர் விபச்சார ஊழியர்கள் பற்றி நடத்திய முதற்கட்ட கணக்கெடுப்பில் அறிய வந்த சில தகவல்களாகும். இந்த முதற்கட்ட ஆய்வறிக்கை பெண்கள் கூட்டமைப்பான “அக்ஷரா தகவல் மைய”த்தில் வெளியிடப்பட்டது.

பெண்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிரான குழுவின் மூலம் இந்த ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டது. சங்கிலித் தொடராக 14 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் 3000 க்கும் அதிகமான விபச்சார தொழில் செய்யும் பெண்களயும், அத்தொழிலோடு தொடர்புடைய ஆண்களையும் பயன்படுத்தி கண்டறியப்பட்ட விஷயங்கள் முடிவுகளாக வெளியிடப்பட்டுள்ளது. “எத்தனைப் பெண்கள் விபசாரத் தொழிலில் உள்ளனர் என கண்டறிவது.

மேலும் HIV மற்றும் சுகாதார நிலை பற்றி அறிந்து கொள்வதும் தான் இந்த ஆய்வின் பிரதான எண்ணம் என்ற போர்வையில் இந்த முயற்சியை மேற்கொண்டோம். விபச்சார தொழில் செய்பவர்களுடன் பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் நேர்காணல்களுக்கு பிறகே அவர்களது வாழ்க்கை நிலை பற்றிய நிலவரங்கள் முடிவு செய்யப்பட்டன.

இந்த ஆய்வறிக்கையின் படி விபச்சார தொழில் ஈடுபட்டுள்ளவர்களில் 65 சதவிகித பெண்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் 60 சதவிகித பெண்கள் கிராம புறங்களில் இருந்து வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் வேறு வேலைகளில் பணியாற்றிய பின்னரே இந்த விபசாரத் தொழிலுக்கு வந்துள்ளனர்.

இதில் மிக சிலர் மட்டுமே நேரிடையாக விபசாரத் தொழிலை தேர்ந்தெடுத்துள்ளனர். மற்ற துறைகளின் ஊழியர்களை பார்க்கும் பொது, இது தான் மிகவும் மோசமான ஒரு வேலை என சாஹினி தெரிவிக்கிறார்.

இந்த ஆய்வறிக்கை மூலம் விபச்சார தொழில் செய்பவர்கள் சமூகத்தின் மிக தாழ்ந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை அவர்களுக்கு உணரச் செய்ய முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றும் சாஹினி கூறினார்

இந்த ஆய்வின் அடுத்தக் கட்டமாக விபசாரம் செய்யும் ஊழியர்களை துன்புறுத்தி செய்யப்படும் கொடுமைகள், மனோ ரதியாக இழைக்கப்படும் கொடுமைகள், வெவ்வேறு பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்கப்படும். அதற்கு அவர்களது உதவிகள் இன்றியமையாதது என்று சாகினி கூறினார் .

No comments: