May 1, 2011

விமானம் மூலம் துப்பாக்கிகள் போட்டது யார்?

கடந்த 1995-ம் ஆண்டு, மேற்கு வங்காள மாநிலம் புரூலி என்ற இடத்தில், விமானம் மூலம் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் தரையில் போடப்பட்டன.

இது ஆனந்த மார்க்கம் என்ற ஹிந்துத்துவா அமைப்புக்கு போடப்பட்டது. இதன் பின்னணியில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் மற்றும் இந்திய உளவு அமைப்பான "ரா" வும் இருந்து செயல்பட்டுள்ளனர்.

இந்த ஆயுதங்கள் ஏன்? ஹிந்துத்துவா இயக்கங்களுக்கு அனுப்பப்பட்டது. பரபரப்பான இந்த சம்பவம் பற்றி, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.,

துப்பாக்கிகளை மேற்கு வங்காளத்தில் போட ஏற்பாடு செய்தது யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்''அதன் முழு விபரமும் அறிவிக்கப்பட வேண்டும். என்று இடதுசாரி கட்சிகள் கோரி வருகின்றன.

இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் ஏ.பி. பரதன் ஆகியோர் நிருபர்களிடம் பேசுகையில்,

``இந்த சம்பவம் பற்றிய முழு விவரங்களை மத்திய அரசு வெளியே கொண்டு வர வேண்டும். எனவே இதுபற்றி முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

No comments: