Apr 9, 2011

குஸ்பு உங்கள் கடமை உணர்வு புல்லரிக்க வைக்கிறது!!

கலைஞரை தனிப்பட்ட முறையில் விமர்சித்து பேசிவரும் ஜெயலலிதாவுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று நடிகை குஷ்பு பேசினார்.

தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே சிலர் வெளியே வந்து பொய்களை கூறி வாக்கு கேட்கின்றனர். தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஓய்வெடுக்க சென்று விடுவார்கள்.

முதல்வர் கலைஞர்தான் என்றென்றும் மக்களுக்காக ஓயாது உழைக்கும் தலைவராக இருக்கிறார். மக்களின் நலன்களை சிந்தித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கின்றனர். ஆனால் ஜெயலலிதா கூட்டணியை சேர்ந்தவர்கள் எல்லாம் கலைஞரை தனிப்பட்ட முறையிலும் நியாயமற்ற முறையிலும் திட்டி விமர்சனம் செய்து வருகிறார்கள். அவர்களின் பொய் பிரசாரங்களை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

சிந்திக்கவும்: தமிழக அரசியல் இப்பொது கலை கூத்தாடிகள் கையில். இப்போதுதான் உங்கள் எல்லார் சுயரூபமும் வெளியே வரும். ஆட்சிக்கு வந்துவிட்டால் ஆளும்கட்சி அடங்கிவிடும் என்னென்றால் கொள்ளை அடிக்கவேண்டுமே.

எதிர் கட்சி முதலில் அடித்த கொல்லைக்கு ஜெயிலுக்கு போகாமல் இருக்கணுமே இதனால் அவர்களும் அடக்கி வாசிப்பார்கள். இந்த கூத்துகள் எல்லாம் தேர்தல் சமயத்தில் மட்டும்தான். குஸ்பு அம்மா அடங்குங்கள்!! நீங்கள் யார்? எப்படி அரசியலுக்கு வந்தீங்கள் எல்லாம் மக்கள் பார்த்து கொண்டு இருகிறார்கள்.

பாவம் தமிழக மக்கள் போதிய கல்வி அறிவு இல்லாதாதால் இந்த மக்களை உங்கள் இஸ்டத்திற்கு ஆட்டி படைக்க முடிகிறது. மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால் நீங்கள் அம்போதான்.

உங்களுக்கு கொள்கையும் கிடையாது கோர்பாடுகளும் கிடையாது. பணம் கொடுக்கும் பக்கம் பதவி கொடுக்கும் பக்கம் அல்லது வரி எய்ப்பு பண்ண ஏதாவது ஒரு கட்சியில் உங்களை நுழைத்து கொண்டுளீர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும்.

கொஞ்சம் அடக்கி வாசிங்கமா!! உங்கள் கடமை உணர்வு புல்லரிக்க வைக்கிறது. எல்லா அரசியல்வாதிகளும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

2 comments:

ஊரான் said...

"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.

இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

மேலும் படிக்க...
ஒரு தரம்... ரெண்டு தரம்...!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html

Unknown said...

மக்கள் சிந்திக்க கூடாது என்று தானே இந்த இலவசம் எல்லாம். தலைவரு என்ன எடுத்தாருன்னு யாருக்கும் தெரியாது, என்ன குடுத்தாருன்னு மட்டும் பாருங்க, இந்த தடவை கதாநாயகி அப்பிடின்னு சொல்லி இருக்காரு. பார்த்தா கதாநாயகி மாதிரி தெரியலை, ஆசை நாயகி மாதிரி இருக்கு.