Apr 29, 2011

சாவும் முன்னே சவப்பெட்டி!! புதிய சர்ச்சை!!!

ஐதராபாத், ஏப். 30, ஆந்திராவில் உள்ள 3 தெலுங்கு தொலைக்காட்சிகள் நேற்று சில செய்திகளை ஒளிபரப்பின.

அதில் சாய்பாபா மார்ச் 28-ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 1-ந் தேதியே பெங்களூரை அடுத்த மல்லேஸ்வரம் என்ற ஊரில் சாய் பாபாவுக்காக சவப்பெட்டி செய்ய அறக்கட்டளை சார்பாக ராஜேந்திர ரெட்டி என்பவர் ஆர்டர் கொடுத்து உள்ளார்.

அந்த சவப்பெட்டியும் ஏப்ரல் 5-ந் தேதி புட்டபர்த்தி வந்து சேர்ந்து உள்ளது. இவ்வாறு அந்த தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு சவப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்ததற்காக ரூ.57,000 கொடுக்கப்பட்ட ரசீதையும் ஆதாரமாக காட்டின.

இந்த சர்ச்சை குறித்து இன்று அறக்கட்டளை நிர்வாகிகள் நிருபர்களை சந்தித்து பேட்டி அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments: